கள்ளக்குறிச்சி மரணத்தை தமிழக காவல்துறை கையாண்ட விதமும், அதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தை அணுகும் விதமும் தமிழ் நாட்டின் காவல் துறையை வழி நடத்துவது தமிழக முதலமைச்சரா? அல்லது ஆர்.எஸ்.எஸ் தலைமையா? என்ற சந்தேகம் வலுக்கிறது. மைக்கேல்பட்டி மாணவி மரணத்தில் தமிழக பாஜக நேரடியாக களம் கண்டது! ஆனால், இதில் ஆர்.எஸ்.எஸ் பின்னணியில் இருந்து சதித் திட்டம் தீட்டி செயல்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டை சுலபத்தில் அலட்சியபடுத்த முடியாது. உண்மையில் இந்தக் கலவரம் மக்களின் தன் எழுச்சியால் தான் உருவானது. அந்த பள்ளி நிர்வாகம் கடந்த ...
இலக்கியம்,அரசியல்,தத்துவம், திரைப்பட ஆய்வுகள், மொழிபெயர்ப்பு என சர்வதேச தளத்தில் இயங்கி வருபவர் யமுனா ராஜேந்திரன். ஜெயமோகனின் துவேஷ இலக்கியச் செயல்பாடுகள், பெண் புரட்சியாளர் ரோசா லுக்சம்பர்க், உலக அளவில் இன்றைய கம்யூனிச செயல்பாடுகள், ரஷ்யாவில் நடப்பது என்ன..? இலங்கை நிலவரம் ஆகியவை பற்றி யமுனா ராஜேந்திரன் பீட்டர் துரைராஜிடம் பேசியவை! ஜெயமோகனுக்கு ஆர்எஸ்எஸ் தந்திருக்கும் புராஜக்ட்தான் கம்யூனிஸ்டுகளை அவமானகரமாக விமர்சித்துக் கொண்டேயிருப்பது என்று சொல்கிறீர்கள். அவரை பொன்னீலன், கோவை ஞானி, பவா.செல்லதுரை போன்ற மார்க்சியர்களே தாங்கிப் பிடிக்கிறார்களே? ஜெயமோகன் எழுதிய பின் தொடரும் நிழலின் ...