தமிழகத்தில் மட்டுமல்ல,அகில இந்திய அளவிலும்,ஒரு ஆபத்தான போக்கு தலைதூக்கி வருகிறது! ’’அரசியல் அதிகாரம் பெறுவதற்குச் சாதி அடையாள அரசியலை முன்னெடுக்க வேண்டும்’’ என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள்ளும் அந்த சிந்தனைப்போக்கு தற்போது தலை தூக்கியுள்ளது. அந்தப் போக்கு அதை மைய நீரோட்டத்திலிருந்து தனிமைப்படுத்திவிடுமோ… என்ற கேள்வியும் கூடவே எழுந்துள்ளது! அக்கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் விசிகவை ஒரு வலுவான சாதி அடையாளத்துடன் கூடிய கட்சியாகக் கட்டமைக்க வேண்டும் எனப் பேசியுள்ளார். அவர் தன் பேச்சில்,எப்படி வன்னியர்களுக்கென்றும்,தேவேந்திரக்குள வேளாளர்களுக்கென்றும், அருந்ததியர்களுக்கென்றும் ...