இந்தியா முழுமையிலும் தஞ்சை மாணவி மரணம் ஒரு விவாத பொருளாகியுள்ளது. மதமாற்ற நிர்பந்தம் நடந்துள்ளதா? அல்லது தனிப்பட்ட டார்ச்சர் எனும் மனித உரிமை மீறலா ? பொய்யைப் பரப்பி பாஜக தூண்டுகிறதா..? உண்மையில் நடந்தவை என்ன? அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் முருகானந்தம் (47). இவரின் முதல் மனைவி கனிமொழியின் மகள் லாவண்யா (17) தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் தூய இருதய மேல் நிலை பாடசாலை என்ற உண்டு உறைவிட பள்ளியில் படித்து வந்தார். அவர் தங்கியிருந்த ஹாஸ்டலின் நிர்வாகி ...
எம்.ஆதித்யா, பனைமரத்துப்பட்டி, சேலம் ”ரபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டதில் காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே இடைத்தரகர் சூசேன்குப்தாவிற்கு ரூ65 கோடி தரப்பட்டுள்ளது பற்றி ராகுல் பதில் சொல்ல வேண்டும்” என்கிறதே பாஜக? இதைக் கண்டுபிடிக்க ஏழு ஆண்டுகளா..? இதைத் தெரிந்து கொள்ளாமல் தான் ஒப்பந்தம் போடப்பட்டு 36 விமானங்கள் வாங்கபட்டதா? இந்த அளவுக்குத் தான் நிர்வாகத் திறமையா..? தவறு நடந்திருக்கிறதென்றால், தண்டிக்க வேண்டியவர்களே நீங்கள் தானே? சம்பந்தப்பட்டவர்களை எப்போது உள்ளே தள்ளப் போகிறார்கள் மோடியும், அமித்ஷாவும்! விவகாரத்தை திசை திருப்பாமல் பதில் சொல்லட்டும். காங்கிரஸ் ஆட்சியில் ...
2015 தின் சோக காட்சிகள் இந்த ஆண்டும் அரங்கேறுவதற்கான சாத்தியகூறுகள் இருந்த போதிலும், ஆட்சி மாற்றத்தினால் கொஞ்சம் தப்பித்தோம் என்று தான் சொல்ல வேண்டும்! பல ஆயிரம் கோடிகள் மழை நீர் வடிகால் பணிகளுக்கு செலவழிக்கப்பட்டுள்ளன. அவை போதுமான பலன்களை தராமல் வீடுகளுக்குள் வெள்ளம் போனதன் காரணம் என்ன..? இன்றைய ஆட்சியாளர்கள் பேரழிவுகளை தவிர்க்க ஆனமட்டும் முயற்சிக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. முதல்வரும், அதிகாரிகளும் களத்தில் இறங்கி வேலை செய்கின்றனர். இப்போதே நிலைமை இப்படி உள்ளது. இன்னும் நான்கைந்து நாட்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் ...