இந்தியா ஏறத்தாழ சுயச்சார்பை இழந்து கொண்டுள்ளது. எந்தெந்த விசயங்களில் எல்லாம் நாம் அந்நிய தேசத்தவரை அண்டிப் பிழைக்கிறோம் தெரியுமா..? காந்தி அன்று ஆடையைத் துறந்தார்! நாம் நம் சொந்த ஆன்மாவையே தொலைத்துக் கொண்டுள்ளோம். காந்தி ஆடைமாற்றம் கண்ட நூற்றாண்டு நினைவு தமிழகத்தில் பரவலாக நினைவு கூறப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது என்றாலும், காந்தியை வெறுமனே பேசுவதிலும், சிலாகிப்பதிலும் நாம் திருப்தியடைந்துவிடுகிறோம். அவர் வாழ்நாளெல்லாம் போராடி நமக்கு பெற்றுத் தந்த சுயராஜ்ஜியத்தை – சுயச் சார்பை இன்று ஏறத்தாழ நாம் இழந்து நிற்கிறோம் என்பதையே உணர முடியாதவர்களாகவுள்ளோம். இன்று ...