ஜெய்பீமையே தூக்கி சாப்பிடும்படியான அசாதாரணமான சம்பவங்களைக் கொண்டது கோகுல்ராஜ் கொலை வழக்கு! சம்பந்தப்பட்ட கொடூர கொலைக் குற்றவாளி யுவராஜுக்கு பின்னணியில் தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசும், அதிகார வர்க்கமும், செல்வாக்கான சமூக கட்டமைப்பும் செய்த ஆதிக்கம் கொஞ்ச நஞ்சமல்ல! நம்ப முடியாத சம்பவங்களும், சாகஸ காட்சிகளும், திகில் நிறைந்த வரலாறும் கொண்டது இந்த வழக்கு! அனேகமாக யுவராஜீக்கு கோகுல்ராஜ் முதல் கொலையாக இருக்க முடியாது. இது போன்ற ஆணவக் கொலைகளுக்காகவே அந்த சமூகத்தால் மாவீரன் என்றும், எழுச்சி நாயகன் என்றும், அந்த சமூகத்தின் இதய துடிப்பாகவும் ...