பொய், வன்முறை, அத்துமீறல், அராஜகம் ஆகியவற்றின் மூலம் தமிழகத்தில் பாஜக காலூன்றி விடலாம் என நினைப்பதாகத் தெரிகிறது. நான்கு நாட்களில் ஐந்து சம்பவங்களை தமிழகத்தில் அரங்கேற்றியுள்ளது பாஜக! அண்ணாமலையின் அராஜக அரசியலுக்கு திமுக ஏன் இவ்வளவு பலவீனமாக எதிர்வினையாற்றுகிறது..? தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவி ஏற்றது முதல் திமுகவிற்கு எதிரான ஒரு போர் அரசியலை முன்னெடுத்து வருகிறார். ஒருவித வன்ம அரசியலை வளர்ப்பதிலும், வெறுப்பு அரசியலை வேகப்படுத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார் என்பது தெளிவாக உணர முடிகிறது. இதற்காகவே தமிழகத்தில் பல கொலை,கொள்ளை ...