ஸ்டாலின் டெல்லி விசிட் பல கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் வித்திட்டு கூட்டணிக் கட்சிகளையும், மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. சந்தர்ப்பவாதம், சரண்டரின் தொடக்கம், காங்கிரசிடமிருந்து விலகல்.. ஆகிய விமர்சனங்கள் வேகம் எடுத்துள்ளன! நாம் இதை எப்படி புரிந்து கொள்வது? டெல்லியில் ஏற்கனவே தமிழக அரசின் விருந்தினர் மாளிகை உள்ளது. திமுகவிற்கு என்று பாராளுமன்ற வளாகத்திலேயே அலுவலகமும் உள்ளது. இந்த புதிய அலுவலகமானது காங்கிரஸ் காலத்திலேயே ஏழு எம்.பிக்களை பெற்றுள்ள எந்த ஒரு கட்சிக்கும் டெல்லியில் அலுவலகம் கட்டிக் கொள்ள அன்றைய மத்திய அரசால் வழங்கப்பட்ட நிலத்தில் தற்போது ...

காங்கிரஸ்  பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அறிந்தோ அறியாமலோ, இந்துத்துவா சர்வாதிகாரம் வளர்வதற்கு நேரு குடும்பத்தினர் எல்லா வாய்ப்புகளும் கொடுக்கின்றனரோ..?  2024 ல் மீண்டும்  படு மோசமான பாஜக ஆட்சி தொடரும் என்றால், நேரு குடும்பத்தை நம்பிக் கொண்டு, இந்த ஆபத்தை அனுமதிக்க போகிறோமா? எட்டு ஆண்டுகால  மோடி அரசை பாராபட்சமின்றி மதிப்பிட்டு பார்த்தோமேயானால், இந்த அரசின் சாதனை மிகவும் குறைவாகவே உள்ளது.  இந்த அரசு வளர்ச்சி விகிதங்களில் கணிசமான சரிவைக் கண்டுள்ளது கொரோனா தொற்றுநோய் வருவதற்கு முன்பே இது வெளிப்படையாகத் தெரிந்தது. மேலும், வேலையின்மை ...

மிகுந்த ஏதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கபிள்சிபில், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட அதன் 52 செயற்குழு உறுப்பினர்களுடன் கூடி அனைத்து பிரச்சினைகளையும் மனம் திறந்து விவாதித்துள்ளது! கட்சித் தலைவருக்கான தேர்தல் அறிவிக்கபட்டதோடு, காங்கிரசுக்கு சித்தாந்த பிடிப்புள்ள – போராட குணம் வாய்ந்த – களத்தில் நின்று போராடக் கூடியவர்களே இன்றைய தேவை என்பதை சோனியாவும், ராகுலும் சூசகமாக தெளிவுபடுத்தினர்! காங்கிரஸ் தலைமையை விமர்சித்து  பகிரங்கமாக பொதுவெளியில் பேசிய கபிள்சிபிள், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட அனைவரும் கூடி விவாதித்தனர்! மன்மோகன்சிங் மருத்துவமனையில் ...

இன்று அதிகாலை கொரானாவின் பின் விளைவுகளால் வீழ்த்தப்பட்டு அகமது பட்டேல் மறைந்த செய்தி வேறு எவரையும் விட சோனியா, ராகுல்,பிரியங்கா முவரையும் மிக அதிகமாகவே பாதித்துவிட்டது. அந்த அளவுக்கு அந்த குடும்பத்தில் ஒருவராக தன்னை சுமார் 35 ஆண்டு காலம் பிணைத்துக் கொண்டு வளைய வந்தவர் அகமது பட்டேல்! ராஜீவ்காந்தி எதிர்பராவிதமாக அரசியலுக்குள் நுழைந்த போது அவர் தனக்கு ஆப்த நண்பனாக அடையாளம் கண்டது அகமது பட்டேலைத் தான்! அகமது பட்டேலைத் தான் ராஜீவ் காந்தி தனது ஆட்சியில் பாராளுமன்ற செயலாளராக வைத்துக் கொண்டார். ...