எஸ்பி.பியின் மறைவைச் சுலபத்தில் ஒரு சம்பவமாகக் கடந்து செல்லமுடியவில்லை! நினைவு தெரிந்தது முதல் 50 ஆண்டுகளாக கேட்டு பழகிய குரல்! அந்தக் குரல் காதுகளில் நுழைந்ததா? இதயத்தில் படர்ந்ததா…,ரகசியங்களைப் பரிமாறியதா…?மனதில் உற்சாகம் கரைபுரள வைத்ததா? கண்களில் கண்ணீர் வழிய வைத்ததா…?பயணங்களில் துணையாக வந்ததைச் சொல்வதா? இரவெல்லாம் தூக்கம் வரும் வரை துணை நின்ற கருணையை சொல்வதா? ’’நமச்சிவாய, நமச்சிவாய ஓம் நமச்சிவாய’’ எனப்பாடிய போது பக்தி மனநிலையில் மனம் கசிந்துருக வைத்ததை சொல்வதா…! அவரது மறைவு கோடிக்கணக்கான இசை ரசிகர்களை அதிர்ச்சியிலும், மீளதுயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. ...