சரியான தலைமையை அங்கீகரிக்க மறுப்பது, தகுதியற்ற தலைமையை திணிப்பது என்ற சர்வாதிகாரத்திற்கான விலையைத் தான் அகில இந்திய காங்கிரஸ் தலைமை அனுபவித்துக் கொண்டிருக்கிறது புதுச்சேரியில்! கடந்த ஐந்தாண்டுகளாக புதுச்சேரி அரசியலில் கையாலாகத்தனம்,கோமாளித்தனம் ஆகியவற்றின் அம்சமாக சொந்தக் கட்சிக்காரர்களாலேயே பார்க்கப்பட்டு வருபவர் தான் நாராயணசாமி! புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கோ, புதுச்சேரி மக்கள் நலனுக்கோ எந்த விதத்திலும் பாடுபட்டு அரசியலில் உயர்ந்தவரல்ல நாராயணசாமி! புதுச்சேரி தலைவர்களில் ஒருவரான ப.சண்முகத்தின் நம்பிக்கையைப் பெற்று, அவருக்கு பின்பு டெல்லி அரசியல் தலைமையின் அணுக்கத்திற்கு உரியவராக மாற்றியவர் தான் நாராயணசாமி! ...
தினமலர் தொடங்கி எல்லா அக்கிரஹார பத்திரிகைகளிலும் முதல் பக்க செய்தியாக மு.க.அழகிரியின் மதுரை கூட்ட பேச்சு வெளியாகியானது..! இனி தொடர்ந்து அழகிரியின் ஒவ்வொரு அசைவுகளையும் இந்திய ஜனாதிபதிக்கான முக்கியத்துவத்துடன் இவர்கள் போடுவார்கள்….! ஆனால், நேற்று வரை அவரை ரவுடி என்றும், மதுரையை ஆட்டிப் படைத்த அராஜக அரசியல்வாதி என்றும் எழுதியவர்கள் இவர்களே! கருணாநிதி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நேரத்தில் அவரை காண வந்த குருமூர்த்தி அப்போதே அழகிரியை தனி அறைக்கு அழைத்துச் சென்று ஒரு மணி நேரம் தனிமையில் பேசினார். ரஜினி அரசியலுக்கு ...
இன்றைய திமுகவிற்கு உண்மையான தலைவர் யார் என்ற குழப்பம் அந்த கட்சிக்குள்ளும்,கூட்டணி கட்சிகளுக்கும் எழுந்துள்ளது? இன்னின்ன தொகுதியில் இன்னார் தான் திமுக வேட்பாளர்! இவருக்கு வாய்ப்பில்லை, இவருக்கு வாய்ப்பு! இன்ன வயதுக்குள்ளானவர்கள் மட்டுமே வேட்பாளராக தேர்வாவார்கள்! திமுக இத்தனை இடங்களில் நிற்கும், அதன் கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் இவ்வளவு சீட்டுகள் தரப்படவுள்ளன. இந்த மாதிரி செய்திகளையெல்லாம் சொல்லும் அதிகாரம் அந்த கட்சித் தலைமைக்குத் தான் கருணாநிதி காலம் வரை இருந்தது. ஆனால்,அந்த அதிகாரம் தற்போது பிரசாந்த் கிஷோரின் ’ஐபேக்’ நிறுவனம் வசம் சென்றுவிட்டதா? தெரியவில்லை. ...