இந்தியாவில் இதழியல் துறையின் இழி நிலைக்கு ’தி இந்து தமிழ் திசை’ ரஜினிகாந்திற்கு சிறப்பு புத்தகம் வெளியிட்டுள்ள நிகழ்வே சாட்சி! மலிவான ரசனை போக்குகளை மகத்தானதாக பூதாகரப்படுத்தி, பிரமிப்பூட்டி, கல்லா நிரப்ப வேண்டிய கட்டாயம் என்ன வந்தது ஒரு பாரம்பரிய பத்திரிகை குழுமத்திற்கு…? இன்றைக்கு நாடும், மக்களும் எவ்வளவோ சிக்கலான விஷயங்களை சந்தித்துக் கொண்டுள்ளனர். விவசாயிகளும்,தொழிலாளர்களும் சுதந்திர இந்தியாவில் இதுவரை சந்தித்திராத சோதனைகளை சந்தித்து எதிர்கொண்டு வருகின்றனர். ஜனநாயகம் கேள்விக்குள்ளாகியுள்ளது..! மனித உரிமை ஆர்வலர்கள் வேட்டையாடப்படுகின்றனர். கொரானா ஏற்படுத்திய பொருளாதாரச் சரிவிலிருந்து பல குடும்பங்கள் ...