ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளால் அடிக்கடி நடக்கும்  இளைஞர்களின் தற்கொலைகள், குடும்பங்கள் நிலை குலைந்து நடுத் தெருவுக்கு வந்து நிற்கும் அவலம்.. என  பல கொடூர விளைவுகள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. தமிழக அரசு இந்த சூதாட்டத்தை தடை செய்யுமா? அல்லது தடுமாறுமா..? ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் சீரழிந்து கொண்டிருக்கின்றன. ஆயினும்  இது, திறமைக்கான விளையாட்டு என்ற போர்வையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அனுமதி பெற்று பல்லாயிரம் மக்களின் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கின்றன ஆன்லைன் ரம்மி நடத்தும் அந்நிய நாட்டு  நிறுவனங்கள். நூற்றுக்கும் ...

சுரேஷ்குமார், கும்பகோணம், தஞ்சாவூர் ஒ.பி.எஸ்சுக்கு தற்போதைய ‘பாஸ்’ யார்? உங்கள் கேள்வியிலேயே அவர் தனக்கான பாஸ்களை மாற்றிக் கொள்பவர் என்பது உங்களுக்கு தெரிந்து இருக்கிறது! அவரது முதல் பாஸ் டி.டி.வி தினகரன், அதற்குப் பிறகு சசிகலா, பிறகு ஜெயலலிதா, இதன் பிறகு மோடி, குருமூர்த்தி..என்பதாகத் தொடர்ந்தது. தற்போது எதிர் முகாமிலேயே தனக்கு பாதுகாப்பான பாஸ் ஒருவரை கண்டறிந்துள்ளார். ஒன்றிய அரசின் தயவை விட, உள்ளூர் அரசின் தயவால் தான் தன் அரசியல் எதிரிகளோடு மோத முடியும் என அவர் சமீபகாலமாக சார்ந்து நிற்கக் கூடிய ...

நியாய விலைக் கடைகளான ரேஷனில் சிறுதானியங்கள் விநியோகம் என்பது உணவு கலாச்சாரத்தில் நிகழ உள்ள உன்னத மாற்றத்தின் ஆரம்பம்! மறைந்து போன நமது உணவு பாரம்பரிய கலாச்சாரத்தையும், ஆரோக்கியத்தையும் விவசாயத்தையும் மீட்டெடுக்கும் நீண்ட நாள் கனவு! சிறுதானியங்களான கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, குதிரைவாலி, சாமை, சின்னசோளம், பனிவரகு ஆகிய எட்டு தானிய வகைகள் மட்டுமே சிறுதானியங்களாகும்! அரிசி என்பது முன்பெல்லாம் ஒரளவு வசதி படைத்தவர்கள்,மேல்சாதிக்காரர்களின் உணவாகவே பெரும்பாலும் அறியப்பட்டு இருந்தது! சிறுதானியங்களே பெரும்பாலான உழைக்கும் மக்களின் உணவாக இருந்தது. அவர்களின் கடின உழைப்புக்கும்,ஆரோக்கியத்திரற்கும் ...

”தமிழில் அர்ச்சனை, கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்தல், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகியவை திமுக ஆட்சியிலும் திரிசங்கு நிலையில் தான் தொங்குகிறது… ஏன் இந்த தடுமாற்றம்..? எதற்கிந்த ஊசலாட்டம்..?” என சீறுகிறார் ‘சிகரம்’ ச.செந்தில்நாதன். “அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யப்படும்” என்ற பலகையை தமிழ் நாட்டில் உள்ள பெரிய கோவில்கள் அனைத்திலும்  “பளிச்” என பார்க்கலாம். தி.மு.க முதன் முதலாக ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து இதற்கான முயற்சி எடுக்கப்பட்டது, அ.தி.மு.க ஆட்சியிலும் இதுபோன்ற விளம்பர பலகைகள் கோவிலில் வைக்கப்பட்டிருந்தன. 2021 தேர்தலில் தி.மு.க வெற்றி ...

‘எதற்காக இவ்வளவு அவசரம் காட்டுகிறீர்கள்..?’ என ராஜேந்திர பாலாஜி கைது தொடர்பாக தமிழக அரசை கேள்வி கேட்கிறது உச்ச நீதிமன்றம்! ஆனால், பல வழக்குகள் நிலுவையில் இருக்க, இவ்வளவு அவசரமாக ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே எடுத்துக் கொண்டது ஏன்…? மோசடி குற்றங்கள் செய்து ஓடி ஒளிந்த ராஜேந்திர பாலாஜிக்காக இவ்வளவு பொங்க வேண்டிய அவசியம் என்ன..? ஊருக்கென்றே உழைத்த உத்தமரை தமிழக காவல்துறை கைது செய்துவிட்டது போலும்!  ”நீதிமன்றத்தை ஏன் தர்ம சங்கடப் படுத்துகிறிர்கள்..” என ...

தமிழகப் பள்ளிக் கல்வியின் சவால்கள் : 6 தமிழக அரசு பள்ளிகளில் பல்லாயிரக்கணக்கில் ஆசிரியர்கள் பற்றாகுறை நிலவுகிறது. இன்னும் ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளா..? ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசுக்கு ஆர்வமில்லையா? இது காலப் போக்கில் அரசுபள்ளிகளை காலாவதியாக்கும் சூழ்ச்சியா..? அரசு ஆரம்ப பள்ளிகளில் 1997 ஆம் ஆண்டு வரை இருபது மாணவர்க்கு ஒரு ஆசிரியர் என்ற அரசாணையே பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால், 1997 முதல்  1 : 40 என்று மாறியது.  மாணவர் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு, ஆசிரியர் பணியிடங்கள் குறைக்கப்பட்டன. கல்வி உரிமைச் சட்டம் ...

புலம் பெயர் தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக இன்று புலம்பெயர் தமிழர் நல வாரியம்’ என்பதாகவெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்கும் வாரியம் தோற்றுவிக்கப்படும் என, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் புலம் பெயர் தமிழர்களின் பல்வேறு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன! அவற்றை கீழே தந்துள்ளோம். அதே சமயம் விடுபட்ட முக்கியமான ஒரு சிலவற்றை கவனப்படுத்துவதே கட்டுரையின் நோக்கமாகும்! தேர்தலுக்கு முன்பே ஸ்டாலின் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான கட்சி அமைப்பாளர்களை அறிவித்து இருந்தது கவனத்திற்குரியது! வெற்றி பெற்று வந்ததில் இருந்து தமிழக ...

உலகத்தில் எத்தனையோ நதி நீர் பிரச்சினைகள் சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளன! ஏன் வட இந்தியாவிலேயே கூட பல மாநிலங்களுக்கு இடையில் பாயும் ஆற்று நீர் பகிர்வு சுமூகமாக முடிவடைந்துள்ளது. பக்ரா நங்கல் பயஸ் மேலாண்மை வாரியம் இதற்கு ஒரு உதாரணம்! ஆனால், காவிரி நீர் பங்கீட்டை மட்டும் ஏன் சுமூகமாக தீர்க்க முடியவில்லை…? இத்தனைக்கும் கடந்த 50 ஆண்டுகளில் காவிரியில் நாம் பெற்று வந்த தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்ட சட்டப் போராட்டங்களால் தமிழகம் காலம்காலமாக பெற்று வந்த காவிரி தண்ணீரை காப்பாற்றிக் ...

”யாரும் எதிர்க்க முடியாது. உண்மைகளை சொல்ல முடியாது. நடப்பது மாபெரும் சர்வாதிகார ஆட்சி, அடங்கிப் போவதே ஆட்சியை தக்க வைக்கும்’’ என்ற ரீதியில் சென்ற ஆட்சியாளர்கள் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த அனைத்து மக்கள் விரோத சட்டங்களையும் ஆதரித்து வந்தது. இதை கண்டு சலிப்புற்று, வேதனையுற்று தமிழக மக்கள் புழுங்கிய நேரத்தில் தான் தேர்தல் வந்தது. கடந்த ஆட்சியாளர்களுக்கு மக்கள் கல்தா கொடுத்து வீட்டுக்கு அனுப்பினார்கள். அதை சரி செய்வதற்கே புதிய ஆட்சியாளர்கள் என மக்கள் நம்பினர். அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. # ...

எப்போதோ அமைக்கப் பட்டிருக்க வேண்டியது! என்றோ கொண்டாடப்பட்டு இருக்க வேண்டியவர்! என்றென்றும் நாம் நினைவில் வைத்து பின்பற்றத் தக்க முன்னோடி அயோத்திதாசருக்கு தற்போது தமிழக அரசு மணிமண்டபம் அமைக்க போவதாக அறிவித்து உள்ளது! தமிழ் நாட்டின் மாபெரும் பகுத்தறிவு சிந்தனையாளர், புரட்சியாளர்,மானுட தர்மத்திற்காக வாழ்ந்தவர், மனு தர்மத்தை எதிர்த்த தீரர். முன்னோடி பத்திரிகையாளர் அயோத்திதாச பண்டிதருக்கு மிக, மிக காலதாமதமாக தமிழ் நாட்டில் மணிமண்டபம் அமைக்கப்படுகிறது என்றாலும், இப்போதாவது – அவரது 175 பிறந்த ஆண்டிலாவது சாத்தியப்பட்டுள்ளது – என்பதில் – மகிழ்ச்சியாக உள்ளது. ...