‘’மேற்கு வங்கம் இந்தியாவை காப்பாற்றிவிட்டது’’ என்று மம்தா பானர்ஜி சொன்ன வார்த்தைகள் சத்தியமான உண்மை! இந்தியாவின் கலாச்சார தலைநகரமான மேற்குவங்கத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்பது பாஜகவின் நீண்ட நாள் பெருங் கனவு! இன்றைய பாஜகவின் தாய் அமைப்பான ஜனசங்கத்தின் ஸ்தாபகரான ஷியாம் பிரசாத் முகர்ஜியின் பிறந்த மண்ணில் பாஜகவிற்கு இடமில்லையே’ என்ற ஆதங்கம், ஆற்றாமை பாஜக தலைவர்களுக்கு நிறையவே உண்டு. இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது மேற்குவங்கத்தை பெருங் கொலைக் களமாக்கியவர் இந்த ஷியாம் பிரசாத் முகர்ஜி! சூமுகமாக முடிந்திருக்க வேண்டிய காஷ்மீர் ...

இந்தியாவின் கலாச்சாரத் தலைநகரமான மேற்கு வங்கம் தற்போது இந்தியாவின் கலவர பூமியாக உருமாறியுள்ளது. நாளொரு துப்பாக்கி சூடு, பொழுதொரு கலவரம் என்று அல்லோகலப்படுகிறது. தேவையற்ற வகையில் எட்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படுவது, மோடியும், அமித்ஷாவும் அடிக்கடி விசிட் செய்து அதகளப்படுத்துவது, மம்தாவின் உக்கிரமான எதிர்வினைகள்..என்பதான வங்கத்தில் யாருக்கு வாய்ப்பிருக்கிறது…? கம்யூனிஸ்டுகள் ஏன் காணாமல் போயினர்…? வங்கத்தை எப்படியாவது வசப்படுத்திவிட வேண்டும் என்று ஒட்டு மொத்த மத்திய அரசின் பலத்தை பிரயோகித்து, மம்தாவின் மாநில ஆட்சியை நிலைகுலைய செய்தது பாஜக! 20 க்கும் மேற்பட்ட எம்.பி, ...

அரசியலில் எந்த ஒரு கட்சியும் தோன்றுவதற்கும், நிலைப்பதற்கும் நிச்சயமாக ஒரு எதிரி தேவை! எதிரியை அடையாளப்படுத்தாதவர்கள், தங்கள் அடையாளத்தை இழந்து அழிந்துவிடுவார்கள்! இருதுருவ அரசியலின் ஈர்ப்பே உலகை இயக்கிக் கொண்டுள்ளது! அமெரிக்காவில் குடியரசு கட்சியும், ஜனநாயக கட்சியும் அடிப்படைத் தன்மையில் வேறுபட்டவை! ஜனநாயகக் கட்சி பன்மைத்துவ தன்மை கொண்டது. கறுப்பர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்டவர்களை அரவணைத்து செல்லும் கட்சியாக உள்ளது! குடியரசுக் கட்சி வெள்ளையின மக்களின் உயர்வு, தாழ்வு கொள்கையை உள்வாங்கிய கட்சியாகும்! ஜார்ஜ்புஷ், ரொனால்டு டிரம்ப் ஒரு எக்ஸ்டீரிம் என்றால் ஒபாமாவும், ஜோபைடனும் அதற்கு ...

தேர்தல் போட்டி என்பதைக் கடந்து ஒரு யுத்தமாக மேற்குவங்கம் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது! எல்லா நியாய அநியாயங்களையும் புறந்தள்ளி அழுத்தொழிப்பு அரசியலாக அது பரிமாணம் பெற்று வருவதை ஒட்டுமொத்த இந்தியாவே பதற்றத்துடன் பார்க்கிறது! தேர்தல் போட்டி என்பது ஜனநாயகத்தில் சகஜமான ஒன்று! ஆனால், அது வங்கத்தை பொறுத்தவரை வக்கிரமான வடிவம் கொண்டு உக்கிரமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது! வகுப்புவாத, மதவாத அரசியல் தழைத்தோங்கும் மாநிலமாக தினம், தினம் ரத்தம் சிந்தும் பூமியாக அது நிறம் மாறிவருகிறது! ஒரு மிகப் பெரிய பாரதப் போர் நிகழ்வதற்கான முஸ்தீபுகள் ...

மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமுள் காங்கிரசை நாளும்,பொழுதும் அணு அணுவாகப் பிளந்து விழுங்கிவருகிறது பாஜக! இரண்டு நாள் பயணமாக தற்போது கல்கத்தாவில் கால்பதித்துள்ளார் அமித்ஷா! திசைமாறி பயணிக்க தயாராகவுள்ள திரிணமுள் தலைவர்களை தீயாய் தேடி எடுத்து அமித்ஷாவிடம் ஒப்படைக்கும் செயல்திட்டம் படுவேகம் பெற்றுவிட்டது! திரிணமுள்ளின் பலமும்,பலவீனமும் மம்தாதான்! மம்தாவின் செயல்பாடுகள் பாஜகவை எப்படி பலம்பெற வைத்துக் கொண்டுள்ளன என்பதை அலசுகிறது இந்த கட்டுரை! மதவாத அரசியலின் மாபாதகத்தை இந்திய – பாகிஸ்தான் பிரிவினையின் போது சந்தித்த மண் தான் வங்கம்! ரத்தகறை படிந்த அந்த மதவாத ...