பசுமை வயல்வெளிகள் பூத்துக் குலுங்கும் கிராமங்கள்! நாற்று நடும் பெண்கள், மாடு பூட்டி ஏர் உழும் உழவன், ஏரிகள், குளம், குட்டைகள். ஆடு, மாடு, கோழிகள் குறுக்கும், நெடுக்குமாக ஓடும் தெருக்கள், கண்ணாம் பூச்சி, சடுகுடு விளையாடும் சிறுவர்கள்..இன்னும் எத்தனை நாள் இந்த அமைதியான வாழ்க்கை அனுமதிக்கப்படுமோ..? எப்போது புல்டோசர்களின் அணிவகுப்பு நடக்குமோ..அப்படி ஒரு சம்பவம் நடந்தால்.., அதற்கு பிறகு நம் வாழ்க்கை என்னாகுமோ..? இந்திய வரைபடத்தில் இருந்து காணாமல் போகும் கிராமம்! பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்தை எதிர்த்து ஏகனாபுரம் மற்றும் ...
இன்னும் எத்தனைக் காலம் தான் மெல்லக் கொள்ளும் விஷமான டாஸ்மாக் மது உற்பத்தியாளர்களை போஷித்து, வளர்த்து வருவார்கள்? ஆரோக்கியமான கள் உலக அளவில் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் ஏன் அதற்குத் தடை? லட்சக்கணக்கான விவசாயிகளை வஞ்சித்து, விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சில பெருமுதலாளிகள் கொள்ளை லாபம் பார்க்க அரசு உதவுவதா? – விவசாயிகள் சங்கத் தலைவர் நல்லசாமி ஆவேசம்! உலகில் 108 நாடுகளில், தென்னை,பனை மரங்கள் உள்ளன! எந்த ஒரு நாட்டிலுமே கள் இறக்கவோ, பருகவோ தடையில்லை! இந்தியாவிலேயே கூட தமிழகத்தைத் தவிர ...