காவல்துறை அதன் செயல்பாடுகள் வழியாகவே மக்களிடம் நல்ல பெயர் பெற முடியுமே அன்றி, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் வழியாக கருத்துருவாக்கத்தை கட்டமைக்க முடியாது; மக்களைக் காப்பாற்ற காவல்துறை என்ற நிலை மாறி, மக்களிடம் இருந்து காவல் துறையைக் காப்பாற்ற என்னென்ன முயற்சிகள் எடுக்கிறார்கள்…என ஒரு அலசல்; தமிழ்நாட்டின் காவல்துறையில் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி என்ற புதிய ஏற்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக ஊடகங்கள் இந்த கோரிக்கையை எழுப்பவில்லை! முக்கியமாக காவல்துறை செய்திகளை சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் தாங்கள் தொடர்பு கொண்டு செய்தி பெற இத்தகைய ...

விசாரணை குழுவாம்! ஆறுபேர் கமிட்டியாம்! எதற்காக..? பிரச்சினையை ஆறப்போடவா..? அதுவும் இந்த விசாரணை அறிவிப்பே சும்மா வரவில்லை ஐ.பி.எஸ் அதிகாரிகள் சங்கம் கொந்தளிக்க தொடங்கியதும் தான் இந்த அறிவிப்பு! தொடர்ந்து பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்களை தரும் ஒரு சாதாரண மனிதன் பிடிபட்டால் லாக்கப் டெத், எண்கெளண்டர், கை,காலை உடைத்து கட்டுப்போட்டு பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக நீதிபதியிடமே பொய் வாக்குமூலம்..என்னென்ன நாடகங்கள் அரங்கேறும்! மக்களும் ஏதோ நீதி நிலை நாட்டபட்டால் சரி தான் என விசில் அடித்து,கைதட்டி ஆரவார வரவேற்பு தருவார்கள்! பலமுறை பாலியல் புகாருக்கு ...