கற்பனைக்கு எட்டாத மிக ஆழ்ந்த ஆன்மீக, அனுபவ மற்றும் ஞானத்தால் கட்டமைக்கப்பட்டது சித்த மருத்துவ மரபு! யோக மரபின் ஆன்மீகப் பாதையில் எண்ணற்ற சித்தர்கள் மனித குலம் நோயின்றி வாழ்வதற்கு தங்கள் தூய நல்லெண்ணத்தால் உருவாக்கிய சித்த மருத்துவத்தை தகுந்த சீடர் கிடைக்காத நிலையில் அப்படியே சொல்லாமல் சென்று விட்டனர். ஆனால், தகுந்த சீடனைக் கண்டடைந்த போது அவர்கள் அதை மனதார அடுத்த தலைமுறைக்கு தந்து சென்றுள்ளனர். அப்படியான அனுபவத்தைத் தான் குப்பமுனி அனுபவ வைத்திய முறை என்ற நூலில் வியக்கதக்க வகையில் தந்துள்ளார் ...
காடுகள், காட்டுயிர்கள், சுற்றுச் சூழல் தொடர்பாக கடந்த 30 வருடங்களாக அக்கறையுடன் இயங்கியும், இவைசார்ந்த ஒளிப்படத் துறையில் செயலாற்றியும் வருபவர் சண்முகானந்தம். இவர் தமிழகக் காடுகளில் மாதக்கணக்கில் தங்கி காட்டுயிர்களை படம் எடுத்தவர். அவரிடம் சமகால சூழலியல் பிரச்சினைகள், குறைந்து வரும் அரிய விலங்கினங்கள், அழிக்கப்பட்டு வரும் காடுகள் ஆகியவை தொடர்பாக நிகழ்த்தப்பட்ட உரையாடல்! சமீபமாக காட்டுவிலங்குகள் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வரத் தொடங்கியுள்ளன. தற்போது டி-23 புலியை தேடும் விவகாரம் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. சூழலியலாளரான நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? ஒரு காட்டுயிர் ...