தயாளன், தாம்பரம், செங்கல்பட்டு பாஜகவை ஆர்.எஸ்.எஸ் வழி நடத்துவதை போல் திராவிட கழகம் திமுகவை ஸ்டாலின் காலத்திற்கு பின் வழி நடத்தினால் ? பாஜகவிற்கும், ஆர்.எஸ்.எஸ்சுக்கும் உள்ள உறவு குரு – சிஷ்ய உறவு! இதில் கமிட்மெண்ட் உண்டு! குருவுக்கு பரிபூரண அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குருவை மிஞ்சியவர்களாக சிஷ்யர்கள் தங்களை ஒரு போதும் கருதுவது இல்லை. கொள்கை இவர்களை வழி நடத்துகிறது. நமக்கு இவர்கள் கொள்கையில் உடன்பாடில்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் கொள்கை உறுதிப்பாட்டுடன் கட்டமைக்கப் பட்டுள்ளனர் என்பதை மறுக்கமுடியாது. திராவிட இயக்கம் தான் ...

காசி மாணிக்கம், திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம் ‘மோசடி செய்தவர்கள் உலகில் எங்கும் ஓடி ஒளிய முடியாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறாரே ‘ பிரதமர் மோடி? உலகில் எங்கு ஒளிந்தாலும் நடவடிக்கை எடுத்துவிடலாம் தான். பாஜகவிற்குள் ஓடி ஒளிந்து கொள்கின்றனரே! ப.சரஸ்வதி, சுங்குவார்சத்திரம், காஞ்சிபுரம் ‘கரோனா மூன்றாவது அலை ஜனவரி,பிப்ரவரியில் தொடங்க வாய்ப்பிருப்பதாக’ சுகாதாரத்துறையினர் சொல்கிறார்களே? சுகாதாரத்துறை ஜோசியத்துறையாகிவிட்டதா? இதை திட்டமிட்டு பரப்புகிறார்களா..? அல்லது பரப்புபவர்களின் குரலாக ஒலிக்கிறார்களா? செந்தில், ஜாபகர்கான்பேட்டை, சென்னை எடப்பாடி உள்ளிட்ட அதிமுக முன்னாள் மாஜிக்கள் ஆளுநரை சந்தித்துள்ளார்களே..? ஆளுநர் ...

ஏ.செந்தில், மதுரை உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அரசியல்வாதிகள் புதிய கட்சிகள் தொடங்கத் தான் இந்த ஜனநாயகம் பயன்படுகிறதே தவிர, சாமானிய மக்களுக்கு என்ன பயன்? சாமானிய மக்களையும் அரசியல்வாதிகள் ஆக்கிக் கொண்டுள்ளது நம் ஜனநாயகம். பணமில்லாமல் தேர்தல் களத்திற்கு வராதே என்று இன்று மக்கள் அரசியல்வாதிகளை மிரட்டத் தொடங்கிவிட்டனர்…! முகைதீன் புதல்வன், இராமேஷ்வரம், இராமநாதபுரம் கேள்வி கேட்பவர்கள் அறிவாளிகளா? பதில் சொல்பவர்கள் அறிவாளிகளா? முட்டாள்தனமான கேள்விகளை எதிர்கொள்ளத் தெரிந்த அறிவாளிகளும் உண்டு. அறிவாளிகளைக் கூட முட்டாள்கள் ஆக்கிவிடும் கேள்வியாளர்களும் உண்டு. ...