தேர்தல் நெருக்கத்தில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களூமே வாக்காளர்கள் மனதில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும். அது தேர்தலின் வெற்றி ,தோல்விகளுக்கு காரணமாகிவிடும்! தொகுதி  பங்கீடு பேச்சுவார்த்தைக்கு முன்பிருந்த திமுக கூட்டணியின் இமேஜ் ,கூட்டணி கட்சிகளை அலைகழித்து பலத்த இழுபறிக்குள்ளான நிலையில் சற்று சேதாரமடைந்துள்ளதாகத் தான் தோன்றுகிறது. திமுகவானது கூட்டணி கட்சிகளுக்கு அவரவர் சக்திக்கேற்ப தொகுதியை சற்று குறைத்து கொடுக்க முயன்றது தவறல்ல. ஆனால், அதை நடைமுறைப்படுத்திய விதம் பக்குவமற்றது. உதாரணமாக காங்கிரஸ் விவகாரத்தையே எடுத்துக் கொள்வோம். கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக காங்கிரஸ் சென்ற சட்டமன்ற ...

தமிழகத்தில் மட்டுமல்ல,அகில இந்திய அளவிலும்,ஒரு ஆபத்தான போக்கு தலைதூக்கி வருகிறது! ’’அரசியல் அதிகாரம் பெறுவதற்குச் சாதி அடையாள அரசியலை முன்னெடுக்க வேண்டும்’’ என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள்ளும் அந்த சிந்தனைப்போக்கு தற்போது தலை தூக்கியுள்ளது. அந்தப் போக்கு அதை மைய  நீரோட்டத்திலிருந்து  தனிமைப்படுத்திவிடுமோ…  என்ற கேள்வியும் கூடவே எழுந்துள்ளது! அக்கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் விசிகவை ஒரு வலுவான  சாதி  அடையாளத்துடன்  கூடிய கட்சியாகக்  கட்டமைக்க  வேண்டும் எனப் பேசியுள்ளார். அவர் தன் பேச்சில்,எப்படி வன்னியர்களுக்கென்றும்,தேவேந்திரக்குள வேளாளர்களுக்கென்றும், அருந்ததியர்களுக்கென்றும் ...