உங்கள் வீடு உங்களுக்கு மட்டும் சொந்தமில்லை… ராமமூர்த்தி சொந்தமாக ஒரு இடத்தை வாங்கினார். அதை தன் உறவினர்கள், நண்பர்களுக்கு மகிழ்ச்சியாக சொன்னார். சட்டப்படி அந்த இடம் அவருக்கு மட்டுமே சொந்தம். அதில் வேறு யாரும் உரிமை கொள்ளவோ, வசிக்கவோ உரிமை இல்லை என்பதை சட்டம் உணர்த்தும். ஆனால் இயற்கை நீதிப்படி ராமமூர்த்தி வாங்கிய இடத்தில் உள்ள மரத்தில் பறவைகள் கூடு கட்டியிருக்கும், அணில்கள் தாவி ஓடும், தரையில் இருந்த  ஓணான் ஒன்று மரத்தில் ஏறும், செடிகளை சுற்றி வண்டுகள், பூச்சிகள் பறந்துக் கொண்டு இருக்கும், ...