எங்கெல்லாம் மதச் சிறுபான்மையினர் உள்ளனரோ.., அங்கெல்லாம் அவர்கள் தாக்கப்படுகிறார்கள்! வங்காளதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் துர்கா பூஜை கொண்டாடும் போது முஸ்லீம்களால் தாக்கப்பட்டனர்! அதில் ஆறுபேர் உயிரிழந்தனர். நூற்றுக்கு மேற்பட்டோர் காயமுற்றனர். இந்த சம்பவம் மூன்றுபுறமும் வங்காளதேசத்தால் சூழப்பட்ட திரிபுராவில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது! வங்கதேசக் கலவரம் நடந்தது அக்டோபர் 15 தில்! அதைத் தொடர்ந்து திரிபுராவில் அக்டோபர் 22 தொடங்கி 27 வரை தொடர்ந்து கலவரம் நடந்துள்ளது. முஸ்லீம்கள் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டனர்! திரிபுராவில் நீண்ட நெடுங்காலம் மாணிக்சர்கார் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி ...