ஸ்டாலின் டெல்லி விசிட் பல கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் வித்திட்டு கூட்டணிக் கட்சிகளையும், மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. சந்தர்ப்பவாதம், சரண்டரின் தொடக்கம், காங்கிரசிடமிருந்து விலகல்.. ஆகிய விமர்சனங்கள் வேகம் எடுத்துள்ளன! நாம் இதை எப்படி புரிந்து கொள்வது? டெல்லியில் ஏற்கனவே தமிழக அரசின் விருந்தினர் மாளிகை உள்ளது. திமுகவிற்கு என்று பாராளுமன்ற வளாகத்திலேயே அலுவலகமும் உள்ளது. இந்த புதிய அலுவலகமானது காங்கிரஸ் காலத்திலேயே ஏழு எம்.பிக்களை பெற்றுள்ள எந்த ஒரு கட்சிக்கும் டெல்லியில் அலுவலகம் கட்டிக் கொள்ள அன்றைய மத்திய அரசால் வழங்கப்பட்ட நிலத்தில் தற்போது ...

மோடி என்றாலே பற்றி எரிகிறது பஞ்சாப்! கொந்தளிக்கும் விவசாயிகள்! குழந்தைகள் முதல் முதியோர் வரை குமுறும் பஞ்சாபிகள்! எல்லாம் தெரிந்திருந்தும் ஏன் சென்றார் பஞ்சாப்? தற்போது எதற்கிந்த மிரட்டல்கள்! இது எந்த சதித் திட்டத்திற்கான ஒத்திகை..? பிரதமர் மோடி பஞ்சாப் பயணத்தை தொடரமுடியாமல் திரும்பி வந்ததை ஒட்டி நேற்று  ஏற்பட்ட சர்ச்சையில் ஏற்படும் கூச்சலும், கூப்பாடும், ஆத்திரமூட்டும் மிரட்டல்களும்  ஆச்சரியமூட்டுகின்றன! கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக போராடி வரும் விவசாயிகள், குறிப்பாக பஞ்சாப் விவசாயிகள் மோடி அரசின் பல்வேறு அடக்குமுறைகள்,கேலி பேச்சுக்கள், ஏமாற்றல்களைத் தாண்டி வெற்றி ...

நாடறிந்த மக்கள் உரிமைப் போராளி மேதா பட்கர். ” நர்மதா பச்சாவோ அந்தோலன்” அமைப்பின் செயல்பாடு வாயிலாக உலகம் முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்களின் கவனம் பெற்றவர்! நர்மதா நதியில் கட்டப்பட்ட அணைக்கட்டுகளால் பாதிக்கப்பட்ட  பழங்குடி மக்கள், ஏழை, எளியவர்களுக்காக போராடி, பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப் பட  முக்கியக் காரணமாக இருந்தவர். இவர் மராட்டிய மாநிலத்தை பூர்வீகமாக கொண்டிருந்தாலும்,நாட்டின் எந்த மூலையில் ஒடுக்கப்பட்ட,ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டாலும் அங்கு சென்று அவர்களுக்காக குரல் கொடுக்கத் தயங்காதவர். இதற்காக அவர் நிறுவிய அமைப்பு “மக்கள் ...