தமிழரின் யோக முறையும் வடக்கத்திய யோகாவும் ஒன்றல்ல! வேள்விச் சடங்குகளைக் கொண்ட சனாதன மரபோ, நமது பாரம்பரிய திருமூலர் யோகாவை சமஸ்கிருத சாயலுக்கு உல்டா செய்து பதஞ்சலி யோகாவாக உரிமை கொண்டாடுகிறது. ஆன்மீகத்திலும்,யோகாவிலும் கூட அரசியல் புகுத்தப்படும் அவலம்! ஆன்மீகத்தையும், யோகாவையும் சந்தைக்கான சரக்காக மாற்றிய கையோடு சமூகத்தின் சகல பிரச்சினைகளுக்கும் சர்வரோக நிவாரணமாக சனாதன யோகா முன்வைக்கப்படுகிறது. சமூக நலனுக்காக இல்லாமல், சந்தைக்கான தேவையாக கல்வி வடிவமைக்கப்பட்டுள்ள சூழல் கொண்ட பின்புலத்தில் தற்போது யோகா எப்படி சனாதன யோகாவாக மாற்றி அமைக்கப்படுகிறது என்பதை ...