கல்விக்கும், மருத்துவத்திற்கும் கணிசமான பங்களித்து வரும் கிறித்துவ சமுதாயத்தை கடும் தாக்குதலுக்கு இலக்காக்கி செயல்படுகிறது பாஜக என்பதை உறுதிபடுத்த இந்த தரவுகளே போதும்! தேவாலயங்களை தீக்கிரையாக்குதல், கிறித்துவர்கள் மீது அவதூறுகள், அராஜகங்கள்..என நீளும் சம்பவங்களின் பதற வைக்கும் பட்டியல்; வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு சமயம் பரப்புவதற்காக வந்த கிறித்தவர்கள் கிறித்தவ சமயத்தை பரப்பியதோடு, இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள பற்பபல இனங்களின் மொழியையும், பண்பாட்டையும், இனக்குழு அடையாளங்களையும் பாதுகாத்து வளர்த்தனர். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அறியாமையில் வாழவைக்கப்பட்ட மக்களுக்கு கல்வி, மருத்துவம், ஆய்வுமுறை, அறிவு போன்றவற்றை கொடுத்து ...