தமிழக அரசு பள்ளிகளுக்கு இனி, டிவிஎஸ் வேணு சீனிவாசன் தான் கார்டியனா? முதல்வரிடம் தான் தொழில் அதிபர்கள் நிதி தருவார்கள். இங்கு முதல்வரே தனியார் தொழில் அதிபரிடம் நிதி தந்து திட்டத்தை நிறைவேற்றக் கோருகிறார். அரசு பள்ளிகளுக்கான ஆபத்தே, இந்த திட்டத்தின் வழியாகத் தான் ஆரம்பித்துள்ளது..!
தமிழகத்தில் 37,000 அரசு பள்ளிகள் உள்ளன! இவற்றில் பல பள்ளிகள் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் அல்லாடுகின்றன! இந்தச் சூழலில், நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் என்ற பெயரில் தனியார் பங்களிப்புடன் ஒரு திட்டம் துவங்கப்பட்டு முன்னாள் மாணவர்களிடமும், தொழில் அதிபர்களிடமும் நிதி கோரப்பட்டு உள்ளது.
இதைக் கேட்டதும் நமக்கு, ‘அடடா இப்போதாவது அரசு பள்ளிகளுக்கு ஒரு விடிவு ஏற்பட்டுவிட்டதே…’ எனத் தோன்றுவது இயற்கை! ஆனால், உண்மையில் இனி மேல் தான் பிரச்சினையே!
தமிழ்நாட்டில் கல்வித் துறை என்று ஒன்றுள்ளது. அதற்கு அமைச்சர் , ஐ.ஏ.எஸ் அதிகாரி மற்றும் பெரிய நிர்வாகக் கட்டமைப்பு உள்ளது. அப்படி இருக்க, அரசு பள்ளிகளை மேம்படுத்தும் முயற்சியை ஏன் தனியாரிடம் தர வேண்டும் என்பது புரியவில்லை. தனியார் பங்களிப்பை பெற்றுக் கொண்டு, அரசே இதை செய்யலாமே. அப்படித் தானே காமராஜர் ஆட்சி காலம் முதல் இருந்து வருகிறது. அரசு பள்ளிகளை மிக அவல நிலையில் வைத்துள்ள தமிழக அரசு, ஒரு சிறிதும் குற்றவுணர்வின்றி, மிக ஆடம்பரமான விருந்தோடு, ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நம்ம ஸ்கூல் விழாவை நடத்தியது. ஏன், இதை ஏதேனும் அரசு பள்ளியில் நடத்த முடியாதா..?

சென்ற ஆட்சியிலுமே கூட கல்வி அமைச்சர் செங்கோட்டையன், ‘சமூக பொறுப்புணர்வு மற்றும் முன்னாள் மாணவர் பங்களிப்பு திட்டம்’ என்ற ஒன்றை 2019 ல் ஆரம்பித்தாரே! அதற்கு நிதி தருபவர்கள் http;//contribution.gov.in என்ற தளத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தானே கூறப்பட்டது. ஆனால், இன்றோ, ‘முதலமைச்சரே பங்களிப்பு செய்ய விரும்பினாலும், அதை தனியார் மூலமாகத் தான் தர முடியும்’ என வேணு சீனிவாசனிடம் தருகிறார் என்றால், இதை எவ்வாறு புரிந்து கொள்வது?
திருடன் கையில் சாவியைக் கொடுப்பதா?
யார் இந்த வேணு சீனிவாசன்? ஒன்ற, இரண்டா..? இவர் மீது எத்தனை குற்றப் பின்னணி உள்ளன! ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தமிழக கோவில்களை புனரமைப்பதாகச் சொல்லி அதற்கு பொறுப்பேற்று முழு அதிகாரத்தையும் எடுத்துக் கொண்டு இவர் ஆடிய ஆட்டங்கள் கொஞ்சமா? நஞ்சமா? எந்தக் கோவிலை இவர் புனரமைப்பதாக பொறுப்பு ஏற்றாலும், அந்தக் கோவிலில் அறநிலையத் துறையின் அதிகாரம் செல்லாக் காசாகிவிடும். கோவிலையும், அர்ச்சகர்களையும் தன் கண்ட்ரோலில் கொண்டு வந்த வேணு சீனிவாசன், அந்தந்த கோவில்களில் உள்ள அரும்பெரும் சிலைகளை அபகரித்து வந்த குற்றச்சாட்டுகள் பரவலாக எழுந்தன! இவர் மீது ரங்கராஜன் நரசிம்மன் என்ற பெருமாள் பக்தர் பல திருட்டு வழக்குகளை போட்டுள்ளார்.
குறிப்பாக ஸ்ரீரங்கம் கோவில் ‘மூலவர் விக்கிரகம்’ , மயிலாப்பூர் கபாளிஸ்வரர் கோவில் புன்னைவன நாதர் சன்னிதியில் ‘மயிலொன்று மலரெடுத்து சிவனை அர்சிக்கும் சிலை’ போன்றவை முக்கியமானவை! இதில் வேணு சீனிவாசன் மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டது. அதற்காக நீதிமன்றம் சென்று உத்தரவு பெறப்பட்டதை அடுத்து, உடனே தலைமறைவாகி முன் ஞாமீன் வாங்கியவர் தான் வேணு சீனிவாசன். அதன் பிறகு பிரதமர் அலுவலகம், ஆர்.எஸ்.எஸ் தலைமை என்று ஓடி லாபி செய்து தப்பித்துக் கொண்டார். இவரைக் காப்பாற்ற துக்ளக்கில் தலையங்கம் எழுதி, கொந்தளித்தவர் குருமூர்த்தி!
இது குறித்து நம் அறம் இதழில்,
குற்றவாளிகளுக்கு துணை போன குருமூர்த்தி
என்ற கட்டுரையும் எழுதியுள்ளோம். இப்படிப்பட்ட பின்னணி கொண்ட வேணு சீனிவாசனை ’டிவிஎஸ் சுந்தரம் அய்யங்கார் பேரன்’ என்ற ஒரே தகுதியில் கண்ணை மூடிக் கொண்டு நம்பி, பல கோடி மாணவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்குவதா? குருமூர்த்தியின் ஆத்ம நண்பர் ஸ்டாலினுக்கு எப்படி நம்பகமானவரானார்?

குறைந்தபட்சத் தகுதியேனும் உள்ளதா?
ஏதோ தேவை இல்லாமல், நாம் இல்லாத ஒன்றை பெரிதுபடுத்தி பேசுவதாக சிலருக்கு தோன்றலாம்! ஆனால் சற்றே யோசித்துப் பார்த்தால் ஏழை, எளியவர்களுக்கான கல்வியில் வேணு சீனிவாசன் இது நாள் வரை காட்டிய ஆர்வம் என்ன? அதற்கான தகுதி அவருக்கு இருக்கிறதா? தமிழ்நாட்டில் கல்வியாளர்கள், சான்றோர்கள், சுயநலமில்லாத புரவலர்கள் என யாருமே இல்லையா..? இந்த திட்டத்தின் நல்லெண்ணத் தூதுவராக விஸ்வ நாதன் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். செஸ் சாம்பியனாக கோடிக்கணக்கில் சம்பாதித்த இவர், இது நாள் வரை தான் சம்பாதித்ததில் எத்தனை சதவிகிதம் ஏழை, எளியவர் கல்விக்காக செலவிட்டுள்ளார்? நடிகர் சூர்யாவை போல இந்த இருவரில் யாரேனும் ஒருவராவது ஏழை, எளியவர்கள் கல்விக்கு உதவியதுண்டா? இவர்கள் இருவரையும் மத்திய பாஜக அரசு நிர்பந்தத்தின் பேரில் தான் தமிழக அரசு நியமித்துள்ளது என்பதை மறுக்க முடியுமா?
இது முழுக்கவே பாஜகவின் வழிகாட்டலே!
தேசிய கல்விக் கொள்கையின்படி அரசு பள்ளிகளை படிப்படியாகத் தனியாரிடம் வழங்கும் முயற்சியின் ஆரம்பமே இந்த திட்டம்! அதனால் தான் தனியாரிடம் நிதிபெற்று அரசு செய்ய வேண்டிய வேலையை – தன் நிதியையும் சேர்த்தளித்து – தனியாரிடம் முதல்வரே தருவதாகும். இனி எந்த சாதாரணக் குடிமகனும் தான் படித்த பள்ளிக்கு நேரடியாகச் சென்று விரும்பிய உதவியை செய்துவிட முடியாது. ஆம், இது வரை அப்படி விரும்பியவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரை சந்தித்துப் பேசி விருப்பத்தை தெரிவிப்பர். தலைமை ஆசிரியர் கல்வித்துறைக்கு தகவல் தந்து, அரசின் ஒப்புதலுடன் பள்ளி வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்வார். இதில் இடைத்தரகர் கிடையாது. அதனால் நேரடியாக ஒரு உதவியை செய்து பார்த்து மகிழ்ந்து செல்ல முடியும்.

ஆனால், தற்போது இந்த இடைத்தரகர் வழியாக மட்டுமே உதவ முடியும். உதாரணத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியம் சைதை அரசு பள்ளிக்கு உதவக் கோரி ரூ ஒரு லட்சத்துக்கான காசோலையை வேணு சீனிவாசனிடம் வழங்கினார். அவரே சைதாப்பேட்டையில் குடியிருப்பவர். அத் தொகுதியின் சட்டமன்ற பிரதிநிதியே அவர் தான். அவர் அரசாங்கத்தின் ஒரு அங்கமாகவும் உள்ளார். எனில், ஏன் அவரால் நேரடியாக தான் படித்த பள்ளிக்கு உதவ முடியவில்லை என்பதை கவனிக்க வேண்டும். ஆக, இனி அரசு கல்வித்துறை டம்மியாக்கப்பட்டு, தனியார் டாமினேஷன் வருவதன் தொடக்கம் தான் இந்த திட்டம்!
தேசிய கல்விக் கொள்கையின் அம்சமே இது!
இந்த நம்ம ஸ்கூல் பவுண்டேசன் வழியாக அரசு பள்ளிகள் நிதி உதவி பெறும் போது, அவர்களின் ஆளுமைக்குள் அவை படிப்படியாக செல்லும். அந்தப் பள்ளிக் கூடங்களில் மாலை நேர வகுப்பாக ‘ஸ்போக்கன் இங்கிலீஸ்’, ‘யோகா பயிற்சி’ என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு அமைப்புகள் நுழைவது எளிதாகிவிடும். அதை அரசு நினைத்தாலும் தடுக்க முடியாது! மேலும், தற்போது ஆசிரியர் பணியிடங்கள் பல நிரப்படாமல் உள்ளன! அவற்றை ஒப்பந்த முறையில் மிகக் குறைந்த ஊதியத்திற்கு அத்துக் கூலிகளைப் போல தான் தமிழக அரசு நியமித்து வருகிறது. வருங்காலத்தில் அப்படியான ஆசிரியர்களை நியமித்து, சம்பளம் தருவதை தனியார் நிறுவனங்கள் ஏற்கும். பிறகு அரசு பொதுத் துறை நிறுவனங்களை, விமான நிலையங்களை தனியாருக்கு தாரை வார்த்தது போல அரசு பள்ளியும் வழங்கப்படும். ஏழை,எளியோருக்கு கல்வி எட்டாக்கனியாகிவிடும்.
தேசியக் கல்விக் கொள்கையை முழுமூச்சாக செயல்படுத்தும் திமுக அரசு!
தமிழக முதல்வாராக ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து மிக கமுக்கமாக தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி வருகிறார். ‘இல்லம் தேடிக் கல்வி’, ‘எண்ணும், எழுத்தும்’ போன்றவை தேசிய கல்விக் கொள்கையின் மிக நுட்பமான தீய அம்சங்களே என்பதை நாம் அறத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில் ‘நம்ம ஸ்கூல் பவுண்டேசன்’ வழியாக, இனி அரசு பள்ளிகள், படிபடியாக தனியார் வசம் செல்லும் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின், தானே ஐயாயிரத்திற்கான காசோலையை வேணு சீனிவாசனுக்கு வழங்கியதன் மூலம் சூசகமாக உணர்த்தியுள்ளார். இது வரை முதல்வர் மூலமே நிதி உதவி தருபவர்கள் தந்து கொண்டிருந்த நிலைமை மாறி, முதல்வரே ஒரு தனியாரிடம் அரசு பள்ளிகளுக்காக நிதி வழங்கும் சகிக்க முடியாத அவலத்தை நாம் பார்த்தோம்.
Also read
இனியும் நாம் விழித்துக் கொள்ளாவிட்டால், கோடானுகோடி இளம் ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்க துணை போன குற்றச்சாட்டுக்கு தான் ஆளாக நேரும். வருங்கால தலைமுறைக்கு பெரும்கேடு விளைவித்தவர்கள் ஆகிவிடுவோம். ஆகவே, அனைத்து ஆசிரியர், மாணவர் அமைப்புகளும், ஜனநாயக சக்திகளும் மேற்படி விவகரங்களை திறந்த மனதுடன் விவாதித்து, பெரும் போராட்ட களத்தில் இறங்க வேண்டும்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
“அறம்” வெளிப்படுத்தி இருப்பது அறச்சீற்றம். இன்னும் சுயமரியாதையுடன் மக்கள் வாழ்கிறார்கள் என்பதை இக்கட்டுரை மூலம் “அறம்” உணர்த்துகிறது. வாழ்த்தும் நன்றியும்.
கல்வி என்பது அரசியல் நடவடிக்கை. கல்வி மறுப்பது ஓர் அரசியல். கல்வி கற்கும் வாய்ப்பை உருவாக்குவது மற்றொரு அரசியல். கல்வி மக்களை அதிகாரபப்படுத்தும். என்றுமே மக்களிடம் “இவர் இல்லை என்றால் நீ படித்திருக்கவே முடியாது” என்ற சிந்தனையை விதைப்பதே கொடை வள்ளல்கள் மூலம் கல்வி தரும் அரசியல். யாரையும், எதையும் எதிர்க்க முற்பட மாட்டார்கள். மீள முடியாத அடிமை மனநிலையில் மாணவர்களை வைத்திருப்பது ஈரோடு சுயமரியாதை பிரகடனத்திற்கு செய்யும் துரோகம். கொடை வள்ளல் கையில் பொதுக் கல்வி! 21ம் நூற்றாண்டில் இப்படி ஒரு நிலை தமிழ் நாடு சந்திக்கும் என்று யாரும் எதிர் பார்த்து இருக்க மாட்டார்கள்.
உண்மை நிலை இது தான் சார், அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் சூழ்ச்சியின் முதல் படி !!
தேசிய கல்விக் கொள்கை 2020ன் ஒரு அங்கம். பின்வாசல் வழியாக தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ நடைமுறைப் படுத்தும் முயற்சி.
‘நம்ம ஸ்கூல் பவுண்டேசன்’ திட்டம் கல்வியை முழுமையாகத் தனியாரிடம் ஒப்படைக்கும் முதல் புள்ளி. இக்கருத்தை ஆழமாக வலியுறுத்திய ஆசிரியர் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
ஜனநாயகத்தில் கல்வி என்பது ஒரு அடிப்படை உரிமை. அனைவருக்கும் கல்வி வழங்குவது அரசாங்கத்தின் கடமை. கடமை தவறுகிறபோது போராட்டங்கள் மூலம் அவற்றை வென்றெடுப்போம்.
ஏதேனும்……
பொய் சொல்லி மக்களின் ஏழை எளிய மக்களின் ஓட்டுக்களை வாங்கி அரியணை ஏறியதும், அற்ப பிறவிகளாய் தெரிகிறார்கள்” ஏழை எளிய மக்கள்” இந்த அரசியல்வாதிகளுக்கு… வருங்காலம், எதிர்காலம், நிகழ்காலம், அனைத்துமே ஏழை எளிய மக்களுக்கு சூனியமாக்கப்பட்டு வருகிறது. வெளிப்புறத் தோற்றத்தில் இந்துத்துவாவிற்கு எதிராக பேசிக்கொண்டு உள்ளார்ந்து அத்தனை செயல்களையும் செய்து வருகிறார்களா இந்த அரசியல்வாதிகள்???????? என்பது பெருத்த சந்தேகத்திற்குரியதாக அமைகிறது”அறத்தின் “இத்தகைய வெளியீடு மக்களை விழிப்புணர்வடைய செய்தால் சரிதான்.
யாராக இருந்தாலும் அரசியல்வாதி அரசியல்வாதி தான். மக்கள் பிரதிநிதியாக ஒருபோதும் ஆக முடியாது. கோடிகளைக் கொட்டி ஓட்டுகளை வாங்கியவன் எப்படி மக்களின் பிரதிநிதியாக வாழ முடியும்.. பாவம் என்றுமே மக்கள் தான்.
ஏதேனும்……
பொய் சொல்லி மக்களின் ஏழை எளிய மக்களின் ஓட்டுக்களை வாங்கி அரியணை ஏறியதும், அற்ப பிறவிகளாய் தெரிகிறார்கள்” ஏழை எளிய மக்கள்” இந்த அரசியல்வாதிகளுக்கு… வருங்காலம், எதிர்காலம், நிகழ்காலம், அனைத்துமே ஏழை எளிய மக்களுக்கு சூனியமாக்கப்பட்டு வருகிறது. வெளிப்புறத் தோற்றத்தில் இந்துத்துவாவிற்கு எதிராக பேசிக்கொண்டு உள்ளார்ந்து அத்தனை செயல்களையும் செய்து வருகிறார்களா இந்த அரசியல்வாதிகள்???????? என்பது பெருத்த சந்தேகத்திற்குரியதாக அமைகிறது”அறத்தின் “இத்தகைய வெளியீடு மக்களை விழிப்புணர்வடைய செய்தால் சரிதான்.
யாராக இருந்தாலும் அரசியல்வாதி அரசியல்வாதி தான். மக்கள் பிரதிநிதியாக ஒருபோதும் ஆக முடியாது. கோடிகளைக் கொட்டி ஓட்டுகளை வாங்கியவன் எப்படி மக்களின் பிரதிநிதியாக வாழ முடியும்.. பாவம் என்றுமே மக்கள் தான்.
Sendhamaraiyin Kalvi Sevaikku Arasu Palligal Thadaiyaga iruppadhaal, ivvaru arasu palligalai Moodum Nokkame ithittam
ஏற்கனவே சாதி பிரச்சினை தீயாக பரவிக்கிடக்கிறது. ஆரியம் திராவிடம் என்றெல்லாம் கொதித்ததாகக் கூறும் திமுக ஆரியத்தின் அடிவருடியாக ஆகிவிட்டதா? எங்கே அந்த திராவிடப் பேரொளி வீரமணி.
அரசு அதிகாரிகள் கடந்த 10 ஆண்டுகளில் கொள்ளை அடித்த சொத்துக்கள் ஏராளம் ஏராளம் அவர்களை நம்பி எந்த திட்டத்தையும் வழங்க முடியாது வேனு சீனிவாசன் போல் கல்வி மாவட்டத்திற்கு ஒருவரை நியமித்து அந்தக் குழுவின் மூலம் நம்ப பள்ளி பவுண்டேஷன் செயல்படலாம்
லட்சம் சம்பளம் வாங்கும் அரசுப் பள்ளி வாத்தியார்கள் அர்ப்பணிப்பு மனப்பான்மை இல்லாமல் வேலை செய்கிறார்கள் அவர்களை கொஞ்சமேனும் வாங்கும் ஊதியத்திற்கு பணியாற்ற செய்தால் கிராமப்புற மாணவர்களுக்கு மிகுந்த தன்மையாக இருக்கும்
கட்டுரையாளரின் கருத்து.
மிகவும் அருமை .கல்வி
வளர்ச்சிக்கு இந்த
இருவரும் என்ன
செய்திருக்கிறார்கள்?
தமிழக அரசும்,
தமிழக மக்களும்
விழித்துக்கொள்ளணும்.
கட்டுரை கண்ணன் அருமையான சுயநலக் கருத்து. இதில் ஏன் அரசியல் சாயம் பூசே வேண்டும்.? அரசியல் இல்லை என்றால் 75% எதிர்ப்பு. நம்ம பள்ளி திட்டத்திற்கு, மற்றபடி பிற கருத்துகள். உண்மை தன்மை.
லட்சத்துக்கும் அதிகமாக ஊதியம் வாங்கும் வருவாய்த்துறையினரிடம் முறையாக வருமான வரி செலுத்தி மிச்ச பண்ண பணத்தில் பணம் கொடுத்து வாங்கின வீட்டு மனைக்கு பத்தாவது படித்து சர்வேயர் வேளைக்கு வந்த ஆளுக்கிட்ட புத்தாயிரம் லஞ்சம் கொடுத்தா தான் பட்டா மாறுதல் செய்யூராரே இதை எப்படி மாத்த போறீங்க சார்.
✊
அருமையான யாரும் தைரியமாக சொல்லாத பதிவு. ஆண்மையுள்ள உண்மையான பத்திரிகை க்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
கவுன்சிலர். MLA. MP… All other government office… எல்லா இடத்திலும் ஊழல்… Pure person only teachers…. 90%tr are perfect… Must change education rules…மாணவர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் .. ஆசிரியரிடம் இருந்து பிடுங்கபட்ட உரிமைகள் அனைத்தையும் நினைவில் கொள்ள வேண்டும் ..1ஸ்ட் cancel the all pass system…all are educated in Tamil naadu state ( புலி தோல் போர்த்திய பசு) படிக்கும் மாணவர்களையும் படிக்க விடாமல் செயும் போக்கு இது ..
Where are going Tamil nadu government .Mr Stalin what are doing there, private trust given education department why sir
Totally wrong assessment and interpretation.by the author without understanding the issue.The central government has now made mandatory of the usage of CSR funds which is now 2percent of the profit earned by the companies. IT HAS NOW BEEN SUGGESTED THAT THERE SHOULD BE A GATE WAY FOR THE POOLING OF THE FUNDS AND FOR FOR UTILISATION OF THE FUNDS FOR THE RENOVATION OF THE DILAPIDATED SCHHOOLS
YOU SHOULD UNDERSTAND THAT GOVT CANNOT UNDERTAKE THIS JOB BUT THEY CAN GIVE DETAILS OF THE SCHOOLS WHICH REQUIRE RENOVATION AND HAVE SUPERVISION
WHY ARE THE FUNDS TO BE ROUTED THROUGH A PRIVATE TRUST HEADED BY THE DECLARED FRAUD? WHAT IS THEIR SPECIAL INTEREST IN GOVT SCHOOLS? ‘THE GOVT CANNOT UNDERTAKE THIS JOB’ – FROM THIS STATEMENT, YOU MEAN THE PRESENT RULERS ARE USELESS. YOUR KNOWLEDGE OF GOVT IS VERY POOR.
சிந்திக்க வேண்டிய ஒன்று.
காவிகளில் கனவு நாயகனாக இருக்கிறா இன்ரைய முதலவர்???
காவிகளின் காதல் அரசாக இருக்கிறாதா இன்றைய மாநில அரசு???
சொல் ஒன்றும்
செயல் ஒன்றும் இன்றைய அரசுக்கு புதிது இல்லை.
மாணவ போரட்டாம் மாணவர் சக்தி மூலம் தான் இன்றைய ஆட்சியாளர்க்கு இருக்கும் நன்மைகள் எல்லாம்.
இந்த திட்டத்தின் தொடக்கத்திலே அனைத்து ஆசிரியர்களும் தமிழ்நாடு தழுவிய போரட்டாத்தை முன் எடுக்க வேண்டும்.
காவி உள்ள வந்து விடும் என பயம் காட்டி கடைசியில் காவிகளின் கால்களில் சரணாகதி அடைந்து விட்டதோ என நினைக்கும் அளவுக்கு இன்றைய அரசின் செயல்பாடுகள் இருக்கிறது
அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வாங்கும் சம்பளத்திற்கு இணையான கல்வித்தரம் இல்லாத காரணத்தால் தான் குக்கிராமங்களில் கூட தனியார் பள்ளிகள் முளைக்கினறன. டில்லியில் அரசு பள்ளிகளின் தரத்திற்கு இணையாக ஏன் நமது தமிழக அரசும் தரத்தை உயர்த்த சிந்திக்க மறுக்கிறது. இலவசங்களுக்கு பதிலாக அரசு பள்ளிகளின் கட்டமைபுக்கு செலவிட ஏன் தயங்குகிறது. இதையெல்லாம் விவாதிக்காமல் பள்ளி அரசு ஆசிரியர்ளைப் போராட்டத்திற்கு தூண்டுவது நல்ல எழூத்தாளருக்கு அழகல்ல
‘நம்ம ஸ்கூல் பவுண்டேசன்’ திட்டத்துக்கும் ஆசிரியர்கள் சம்பளத்திற்கு என்ன சம்மதம் சிவசஙகரநாராயணன். நியாமான கோரிக்கைளுக்காக போராட்டம் என்றாலும் பயப்படுவதேன்.
I strongly request the author to go around the schools surrounding to thiruvannamalai and hosur. He can evidence what Mr.Venu srinivasan has contributed to the education through Srinivasan Service trust
அரசுப் பள்ளிகள் அழிவு என்றோ ஆரம்பித்து விட்டது. யதார்த்த நிலை தெரியாமல் இன்றளவும் ஆசிரியர்களை குறை கூறிக்கொண்டிருக்கும் முட்டாள்தனத்தை என்னவென்று சொல்வது எந்த அரசு வந்தாலும்
எல்லா திட்டங்களிலும் 40% கமிஷன் என்று ஊழல் செய்து பெருத்திருக்கும் அரசியல் வாதிகளை கேள்வி கேட்க தைரியமில்லாத கோழைகள் தான் ஆசிரியர்களை குறை கூறுவார்கள்.
Namma school is the sticker name of Samagra Shiksha scheme ,TN govt is doing nothing here innovative
மிக நல்ல திட்டம்.. எதிர்ப்பவர்கள் இந்த நாட்டின் மீது அக்கறை இல்லாதவர்கள்..
நீங்கள் SOLVATHU 100% தவறு
உங்கள் கருத்து 100% தவறு. உங்கள் சமூக அக்கறை 0%.
நாட்டை நல்லவர் ஆண்டாள் நமக்கு பிடிக்காது, திருடன் முடிச்சு அவுக்கி ஆண்டல் நாமும் திருட சவுகரியமாக இருக்கும் ..
உண்மை நிலை இது தான் சார், அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் சூழ்ச்சியின் முதல் படி !!
ஆரம்பமாகிவிட்டதோ… அரசு பள்ளிகளின் அழிவு!
-சாவித்திரி கண்ணன்