ஒரு சிகப்பு சிங்கத்தின் கர்ஜனை  ஓய்ந்தது! சிறை, தலை மறைவு வாழ்க்கை, துப்பாக்கிச் சூடுகள், தடியடிகள், போராட்டக் களங்கள், சட்டமன்ற பணிகள் என எண்ணற்ற அனுபவங்கள்! தோழர் சங்கரய்யாவின் வரலாறு, தமிழக  வரலாற்றிலிருந்தும், பொதுவுடமை இயக்க வரலாற்றில் இருந்தும் பிரிக்க முடியாதது. ஆளுகிறவர்கள் யார் என்பதைப் பற்றி கவலைப்பட மாட்டார். மக்களை யார் வஞ்சிக்கிறார்களோ, அவர்களுக்கு எதிராக சமரசமற்ற முறையில் போராடக் கூடியவர். தனது ஒன்பதாவது வயதில் பகத்சிங் தூக்குத் தண்டனை விதித்ததை எதிர்த்து தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு ஆரம்பித்த அரசியல் ...