வந்தேறி இஸ்ரேல் யூதர்கள் இன்று பாலத்தீனம் முழுவதையும் ஆக்கிரமித்து கொண்டு, மண்ணின் மக்களை மிக மோசமாக  நடத்துகின்றனர்! இதனால், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் திருப்பி அடித்துள்ளனர்! அதிபயங்கரமான அழிவுகளை, ‘பயங்கரவாதிகளை ஒடுக்குகிறோம்’ என்பதாக இஸ்ரேல் செய்கிறது…! சனிக்கிழமை ( அக்டோபர்-7) அதிகாலை இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ்  தொடங்கிய யுத்தம்.  இஸ்ரேலை நிலைகுலையச் செய்துள்ளது. தரை கடல் மற்றும் வான் வழியாக தங்களது தாக்குதலை நடத்திய ஹமாஸ் தலமையிலான பாலத்தீன விடுதலை வீர்ர்கள் பெரிய தாதாவாக தன்னை உலகிற்கு காட்டி வலம் வந்து கொண்டிருந்த இஸ்ரேல் ...