எந்த ஒரு திட்டத்திலும் யார் பலன் பெறத் தகுதியானவர்கள்,தகுதியற்றவர்கள் என்பது வேளாண் அதிகாரிகளுக்கு துல்லியமாகத் தெரியும்! ஆனால்,மோசடி செய்வதற்கென்றே கொண்டு வரப்பட்ட திட்டமாக இதை அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் நினைத்து செயல்பட்டதாகத் தான் தெரிகிறது இந்த திட்டத்தின் மூலகர்த்தா தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்! அவர் தான், தன் தேர்தல் வாக்குறுதியில் சிறு,குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு நான்காயிரம் இலவசமாக தரப்படும் என அறிவித்து ஆட்சியைக் கைப்பற்றினார். இதைத் தான் மோடி தேர்தலுக்கு முன்பே கொடுத்து அடுத்த ஆட்சிக்கு அடித்தளம் போடும் எண்ணத்துடன் அறிவித்தார். சென்ற ஆண்டு ...