அறம் மூன்றாம் ஆண்டு தொடக்கமும், நூல் வெளியீடும் இனிதே நிறைவேறியது! சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், காந்தியவாதிகள் வாசகர்கள் என அன்பர்கள் கலந்து கொண்டனர். அதில் அறத்தின் சமூக தேவை குறித்த பேச்சுக்கள் முக்கியத்துவம் பெற்றன!  2020 செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி அறம் இணைய இதழ் தொடங்கப்பட்டது. சமகால மக்கள் பிரச்சனைகளை அலசி, பலதரப்பட்ட மனிதர்களிடம் பேசி அந்த பிரச்சனையை எப்படி அணுக வேண்டும், அதன் உண்மைத் தன்மை என்ன என்று ஒவ்வொரு கட்டுரையும் பேசும். தினமும் அறத்தில் கட்டுரை இப்படித்தான் ...