”சனாதனம் என் கொள்கை. அதற்காக பதவி விலகவும் தயார்” என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியுள்ள நிலையில், பெருந்தலைவர் காமராஜருக்கு கோவில்கள், நாத்திகம், கடவுள், வேண்டுதல்கள், புராணம், இதிகாசம், மதப் பண்டிகைகள்..ஆகியவை பற்றி எல்லாம் என்ன மதிப்பீடுகள் இருந்தன என்பதற்கு இதோ ஆதாரங்கள்; தலைவர் காமராஜரோடு நெருங்கி பழகியவர் சீர்காழி பெ.எத்திராஜ். ஒரு நெடிய பயணத்தில் அவர் காமராஜரோடு அருகிருந்து பார்த்தும், கேள்விகள் கேட்டும் பெற்ற விளக்கங்கள் இங்கே தரப்படுகிறது; தலைவர் காமராஜர் தஞ்சை மாவட்ட சுற்றுப்பயணத்தில் வந்தபோது ஒருபழம்பெருமை வாய்ந்த பாழடைந்த கோயிலை ...