எதிர்பார்த்தபடியே சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு உள்ளார். காரில் கஞ்சா இருந்தது, விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் விபத்து, சிறையில் காவலர்களால் கடுமையாக தாக்கப்படுவது.. போன்ற செய்திகள் உணர்த்துவது என்ன..? ஊழல்களை அம்பலப்படுத்துகிறார்! அதிகாரத்தை நோக்கி திணற வைக்கும் கேள்வி கேட்கிறார்! எதற்கும் அஞ்சாத துணிச்சல்காரர் போன்ற பிம்பங்கள் சவுக்கு சங்கர் குறித்து இருந்தன… என்ற போதிலும், அவரது கைதுக்கு எதிராக பொதுச் சமூகம் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. மக்களிடம் இருந்தோ, சக பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், மக்கள் இயக்கங்கள் ஆகியோரிடமோ ...

பல அநீதிகளைத் தட்டிக் கேட்ட, சமூக நீதிக்காக பேசிய சவுக்கு சங்கரின் கைது, ”நியாயமா? அநியாயமா?” என பலமாக விவாதிக்கப்படுகிறது! இதற்கான பதிலை ஒற்றை வரியில் சொல்ல முடியாது. தனி நபர் சார்ந்து பார்க்க வேண்டிய விவகாரமல்ல, இது! சற்று ஆழமான புரிதலோடு அணுக வேண்டிய விவகாரமாகும்! இந்த விவகாரத்தில் நீதிமன்றம் அவசரப்பட்டு உள்ளது! ”இந்தக் கைது ஏற்புடையதல்ல” என்பதை முதலில் சொல்லி விடுகிறேன். சவுக்கு சங்கர் கைதின் வழியாக ஜனநாயகத்திற்கான வெளியை  நீதிமன்றம் முற்றிலும் முடக்க முன்னெடுக்கும் வாய்ப்புகள் தொடர ஒரு போதும் ...