சொந்த நாட்டு மக்களை மத அடிப்படையில் பிரித்து, அதில் ஒரு சாரரை அகதிகளாக, உரிமையற்றவர்களாக மாற்றுவது, மக்களை எப்போதும் அச்சத்திலேயே வைத்திருப்பது… என்பது தான் மோடி, அமித்ஷாவின் நோக்கங்கள்! இனி நாடு முழுக்க திறந்த வெளிச் சிறைச்சாலைகளாக அகதி முகாம்கள் தோன்றவுள்ளன..! குடியுரிமை திருத்த சட்டம் 2019ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்த சட்ட திருத்தம் ஜனநாயக மாண்பிற்கும் ,மதச் சார்பின்மைக்கும் எதிரானது என்று  என உச்ச நீதி மன்றத்தில் 240 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2019 முதலே நாடு முழுவதும் இந்த பாரபட்சமான ...