யதார்த்தமான கலைப் பார்வை, சமத்துவ உணர்வு , விளிம்பு நிலை மக்கள் பால் அன்பு , பெண் நிலைவாதம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரம் போன்ற கருத்தாடல்கள் மீதான நம்பிக்கை கொண்ட ஞானராஜசேகரன் இந்த முறை பெண்ணிலைவாத பார்வையோடு  ஐந்து உணர்வுகள் படத்தை தந்திருக்கிறார். எழுத்தாளர் ஆர். சூடாமணியின் ஐந்து கதைகளை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மோகமுள் , பாரதி ,பெரியார், ராமானுஜன் படங்களை தந்தவர் என்ற வகையில் இயக்குனர் ஞானராஜசேகரன் மீதான பெரிய எதிர்பார்ப்போடு தான் இந்த படத்தை பார்க்க சென்றோம். ...