குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சில தினங்களுக்கு முன் லெப்டினன்ட் கர்னல் சஜ்ஜாத்திற்கு பதம்ஷீ பட்டம் வழங்கினார். இவரின் விவரங்கள் தெரிந்த போது பலரும் ஆச்சரியத்தில் மூழ்கினார்கள். சுமார் 50 ஆண்டுகள் பாகிஸ்தானால் தேடப்பட்டு வரும் இவருக்கு இப்படி பகிரங்கமாக விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது பெரிய அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அப்படி இவர் செய்த செயல்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ள சரித்திரத்தின் பக்கங்களை புரட்டுவோம். பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் லெப்டினன்ட்  கர்னல் காசி  சஜ்ஜாத் அலி  ஜாஹிருக்கு  இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஷீ ...