திராவிட இயக்கம் தோன்றுவதற்கு மூலகாரணமாக இருந்தவர் வள்ளலார். அவருடைய பாடல்களை அச்சிட்டு பரப்பி பெரியாரும், அவர் தம் தொண்டர்களும் பார்ப்பனியத்தின் சூழ்ச்சியை அம்பலப்படுத்தினார்கள்! அந்த வள்ளலாரின் பெருமைகளை சிதைக்க, சனாதனிகள் திமுக ஆட்சியையே பயன்படுத்துவதை என்னென்பது..? அரவணைத்து அழிப்பதே பிராமணியத்தின் தந்திரமாகும். அந்த வகையில் மகாத்மா காந்தி வாழ்ந்த சபர்மதி ஆஸ்ரமத்தை, ”புதுப்பிக்கிறோம், நவீனப்படுத்துகிறோம்” என்ற பெயரில் அழிக்கின்றனர்.  ”மகாத்மாவின் ஆசிரமத்திற்காக 1,200 கோடி ஒதுக்கி உள்ளோம்” எனச் சொல்லி, பளிங்கு மாளிகையாக – பளபளக்கும் கண்ணாடி கட்டிடமாக – காந்தி ஆசிரமத்தை மாற்றும் ...

பார்ப்பதற்கு சாது! அருள் சிந்தும் மலர்முகம்! கருணையிலோ கடல்! ஆனால், பாடும் கவிதையில் சூறாவளி! அநீதியை எதிர்ப்பதில், மூட பழக்கவழக்கங்களை, சனாதனத்தை எதிர்ப்பதில் தீப்பந்தம்! பெரியாரின் குரு! சமதர்ம சித்தாந்தத்தின் கரு! ஐயகோ, கொடுமை! காந்தியைப் போலவே இவரையும் நாம் காக்கத் தவறினோமே. ஆதிகாலத்தில் சமணம், சார்வாகம், ஆஜீவகம் போன்ற மரபினர் வேதங்கள், சடங்குகளை எதிர்த்து நாத்திகம் பேசினர். அவர்களில் உத்தாலகர், விருஷப தேவர், பிரகஸ்பதி, அஜிதகேச கம்பளன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்! ஆனால், வள்ளலார் நாத்திகவாதியல்ல, உருவ வழிபாடுகள், சமயச் சடங்குகளை தவிர்த்து, தனக்குள் ...