அதிகார வர்க்க மூர்க்கத்தின் சாட்சியம் தான் வாச்சாத்தி சம்பவம்! வார்த்தைகளில் சொல்ல இயலாத துயரங்களை அனுபவித்த எளிய பழங்குடிகளுக்கான நீதி, 31 ஆண்டுகள் இழுத்தடிப்புக்கு பிறகே சாத்தியமாகியுள்ளது – இருதரப்பிலும் பலர் உயிருடன் இல்லாத நிலையில்! எனினும், இந்த கண்ணீர் வரலாற்றில் கிடைத்த படிப்பினைகள் பற்பல; தருமபுரி மாவட்டம் அரூர் அரிகிலுள்ள சித்தேரி மலையடிவாரம் கிராமமே வாச்சாத்தி. மலைவாழ் பழங்குடி மக்கள் வாழும் இந்த கிராமம், தண்ணீர் பற்றாகுறையுள்ள இடம் என்பதால் மானாவாரி சிறுதானியப் பயிர்களே இவர்களின் வாழ்வாதாரமாகும். வறியவர்களிலும் வறியவர்களான இந்த மக்கள் ...