வீட்டிலேயே சுகப் பிரசவம் நடப்பது என்பது நமது மரபில் பல்லாண்டுகளாக இருப்பது தான்! ஆனால், தற்போது வீடுகளில் சுகப் பிரசவம் நடப்பதை ஏதோ ஒரு குற்றச் செயல் போல சித்தரிக்கிறார்கள்! நவீன மருத்துவமனைகள் சிசேரியன் செய்வதை கட்டாயப்படுத்துகின்றன! சுயச் சார்போடு வாழ்வதற்கு சுதந்திரம் இல்லையா? சீர்காழியில் ஒரு குழந்தை சுகப்பிரசவத்தில் வீட்டிலேயே பிறந்தது. அதெப்படி வீட்டிலேயே சுகப் பிரசவம் செய்யலாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் போலீஸ் பலத்தோடு வந்து பயங்கர பிரச்சினை செய்தது பெரிய செய்தியானது. ஆனால், தாயும்,சேயும் பரிபூரண ஆரோக்கியத்தில் இருப்பதை ...