திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேனிலைப்பள்ளி மாணவி நந்தினி ப்ளஸ் டூ தேர்வில் முழுமையாக 600 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். முக்கிய ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் கொண்டாடுகிறார்கள். ஆனால், யாரும் அந்த மாணவிக்கு புதுமைப் பெண் திட்ட உதவியை ஏன் வழங்கக் கூடாது என்ற கேள்வியை எழுப்பவில்லை?
புதுமைப்பெண் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் மாதம் தோறும் ரூ.1,000 உயர் கல்வி உறுதித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அரசுப்பள்ளிகளில் பயின்று அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதிக் கல்லூரிகளில் தங்களது உயர் கல்வியைத் தொடரும் மாணவ, மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க https://penkalvi.tn.gov.in/ என்ற இணையதளத்தையும் தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதில் பதிவு செய்திருந்த மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் நேரடியாக அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. மாதம் தோறும் ரூ 1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை ஆசிரியர் தினமான கடந்த செப்டம்பர் 5ஆம் தேதியன்று தமிழக அரசு தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது
அந்த வகையில் மாணவி நந்தினி போன்ற அரசு உதவி பெறும் பள்ளியைச் சார்ந்த மாணவ, மாணவிகளுக்கு புதுமைப் பெண் உதவி திட்டம் கிடைக்காது! இன்று தமிழ்நாடு முதலமைச்சரை மாணவி நந்தினி தனது பெற்றோருடன் சந்தித்துள்ளார். நந்தினியை பொறுத்த அளவில் ”தமிழக அரசே இனி முழு கல்வி செலவையும் ஏற்கும்” என முதல்வர் ஸ்டாலின் கூறிவிட்டதால் பாதிப்பில்லை.
இந்த செய்தியை பார்த்தவுடன் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ளது போன்ற இட ஒதுக்கீட்டை உதவி பெறும் ஏழை, எளிய பள்ளி மாணவர்களுக்கும் விரிவாக்க தமிழ்நாடு அரசாங்க கவனத்துக்கு சில செய்திகளை கொண்டு செல்ல வேண்டியுள்ளது.
மாணவி நந்தினியின் உயர் கல்வி படிப்புக்கு உதவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.
உதவி பெறும் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது போல் குறிப்பிட்ட சதம் உயர் கல்வி படிக்கவும் வேலை வாய்ப்பிலும் இடம் ஒதுக்க வேண்டும். அது அரசு பள்ளி மாணவர்களை பாதிக்காத வண்ணம் கூடுதலாக 2.5 சதவிகிதமாகக் கூட திட்டமிடலாம். அல்லது பேராசிரியர் கல்யாணி குறிப்பிடுவது போல அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களின் மொத்த எண்னிக்கைக்கு ஏற்பவும் திட்டமிடலாம்.
Also read
புதுமைப் பெண் திட்டம் அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து பலராலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேனிலைப் பள்ளி ஓர் அரசு உதவிபெறும் பள்ளி.
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள புதுமைப்பெண் திட்டம் உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கப்படவில்லை .எனவே, இது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் திட்டத்தை விரிவிபடுத்த வேண்டும்.
கட்டுரையாளர்; ப.சிவகுமார்
பேராசிரியர், மற்றும் கல்வி செயற்பாட்டாளர்
எதை செல்ல வந்தாரோ சிவக்குமார்….. இதை எளிமையாக, தெளிவாக சொல்லவில்லை… யாருக்கும் புரியும்????
மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனை கால் நூற்றாண்டுகளாக நான் அறிவேன்.அவர் ஊடகவியலாளர் மட்டும் அல்ல.மிகச் சிறந்த சமூக செயற்பாட்டாளரும்கூட , மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர், குறலற்றவர்களுக்கு குரலாக ஒலிப்பவர். இதற்காக அவர் பட்ட காயங்கள் ஏராளம் அவர் சந்தித்த இழப்புகள் பல. சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும்
சமமான -சீரான கல்வி கிடைக்க வேண்டும் என்பது அவருடைய அடிப்படை எண்ணம்.
அவருடைய கருத்துகளை தொடர்ந்து வாசித்து வருபவர்கள் இதை உணர்ந்து கொள்வார்கள். மத நல்லிணக்கம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளில் மனதார நின்று இயங்குபவர்களால்தான் அவரை புரிந்து கொள்ள முடியும். இங்கு வாழும் அனைத்து தரப்பு மக்களையும் சரிசமமாக நேசிக்கும் யாருமே தேசிய கல்வி கொள்கை 2020 ஐ ஆதரிக்க மாட்டார்கள்.
இந்த கட்டுரை தொடர்பாக சாவித்திரிகண்ணன் கருத்துகளை சிலர் விமர்சனம் செய்ததில் எனக்கு வருத்தம் இல்லை.ஆனால் விமர்சனம் செய்தவர்களில் ஒருவர்கூட ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள கல்விக்கொள்கையை விமர்சிக்க வில்லையே என்று பார்க்கும்போதுதான் பெருத்த ஐயம் எழுகிறது…
Thank you for every other informative site. The place else could I get that kind of information written in such a perfect method? I have a mission that I’m just now working on, and I’ve been at the glance out for such info.
I would like to thnkx for the efforts you have put in writing this website. I am hoping the same high-grade website post from you in the upcoming also. Actually your creative writing abilities has inspired me to get my own website now. Actually the blogging is spreading its wings quickly. Your write up is a great example of it.
of course like your website but you have to check the spelling on quite a few of your posts. Many of them are rife with spelling issues and I find it very bothersome to tell the truth nevertheless I’ll surely come back again.
Howdy! This is my 1st comment here so I just wanted to give a quick shout out and say I really enjoy reading your posts. Can you suggest any other blogs/websites/forums that cover the same subjects? Thanks!