சட்டமன்ற தொகுதி வாரியாக செயல்படுத்தப்படும் நிகழ்வுகள்! தொகுதி வாரியாக நிர்வாகிகள் நியமனங்கள், மாணவர்களிடம் பேசிய அரசியல் .. எல்லாம் அரசியல் ஆசைகளை வெளிப்படுத்துகின்றன..! நண்பன் யார்? எதிரி யார்? என அடையாளம் காண முடியாத ஒரு அரசியல் சாத்தியமே இல்லை! உண்மையைச் சொல்வாரா விஜய்?
சமீபத்தில் நடிகர் விஜய் நன்றாகப் படிக்கும் மாணவ,மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கம் தரத்தக்க வகையில் பேசியுள்ளார்! கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், கல்வி கூடத்திற்கு வெளியே கற்க வேண்டியது குறித்தும் பேசியுள்ளார்.
ஒரு வகையில் இது வரவேற்கத்தக்க நிகழ்வு என்றாலும், நன்றாக படிக்கும், முதல் ரேங்குகளில் வரும் மாணவ, மாணவிகளை மட்டுமே அழைத்து உதவுவது சரி தானா? என்று யோசிக்க வேண்டும். உதாரணத்திற்கு பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற நந்தினிக்கு ஏராளமான நிறுவனங்களும், வைரமுத்து போன்ற தனி நபர்களும், அரசும் பல பரிசுகள் உதவிகள் செய்யும் நிலையில் விஜய்யும் தன் பங்கிற்கு வைர நெக்லஸ் தந்துள்ளார்.
இது வரை சமூகத்தில் சாதித்தவர்கள் பட்டியலை எடுத்தால் சுமாராக படித்த மாணவர்கள் தான் பல்வேறு தளங்களில் சாதித்து உள்ளனர். இன்னும் சொல்வதென்றால், பள்ளி, கல்லூரிகளில் படிப்பு வராமல் இடை நின்ற சிலர் கூட பெரிய சாதனையாளர்களாக, தொழில் அதிபர்களாக உயர்ந்துள்ளனர். நடிகர் விஜய் அவர்களே தன்னை சுமாரான மாணவன் என பகிரங்கமாக கூறிய வகையில் அவரே இதற்கு உதாரணமாகிறார்.
ஆகவே, படிப்பதற்கு உதவி தேவைப்படும் லட்சோப லட்சம் மாணவ, மாணவிகள் இருக்கின்றனர். அவர்களை சற்று மெனக்கெட்டு கண்டறிந்து உதவினால், அது அவர்களுக்கு காலத்தே செய்யும் உதவியாகலாம். இதற்கு நடிகர் சூர்யா பின்பற்றும் மாடலை விஜய் கவனத்தில் கொள்ளலாம்.
சரி, விஷயத்திற்கு வருவோம். இந்த நிகழ்ச்சி மீண்டும் ”விஜய் அரசியலுக்கு வருவாரா?” என்ற கேள்வியை, எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. காரணம், இந்த நிகழ்வுக்கு மாவட்டம் வாரியாகவோ, தாலுகா வாரியாகவோ மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. 234 சட்டமன்ற தொகுதிகள் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விஜய் பிறந்த நாளின் போது அன்னதானம் செய்த போதும் கூட, ஆங்காங்கே இருக்கும் விஜய் மக்கள் இயக்கங்கள் செய்வதாக அமையாமல் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஓரிடம் என நடந்துள்ளது. பொதுவாக அரசியல் கட்சிகள் தாம் இது போன்ற அரசியல் ரீதியான கண்ணோட்டத்துடன் செயல்படுவார்கள்.
விஜய்யின் நடவடிக்கைகளை தொடர்ந்து பார்க்கும் போது அவருக்கு அரசியல் ஆசை இருக்கிறது. ஆனால், அதற்கான துணிச்சல் இல்லாத காரணத்தால் தயக்கமும் இருக்கிறது என்பது தெரிய வருகிறது. கிட்டத்தட்ட ரஜினியும் இந்த மாதிரியான ஒரு நிலைபாட்டிலேயே சுமார் முப்பது வருட காலத்தை ஒப்பேற்றிவிட்டு, கடைசியில் பின்வாங்கினார்.
அரசியலில் ஈடுபடுவதற்கு தேவையான அடிப்படை பண்பு ஒன்று உண்டு. அது நாட்டு நடப்புகளில் ஈடுபாடு காட்டுவது, அநீதிகளை எதிர்ப்பது, மக்களின் துயரங்களில் பங்கெடுப்பது போன்றவை!
சினிமாவில் சுற்றுச் சூழல் இயற்கை வளங்கள் சூறையாடப்படுவது குறித்து கொந்தளித்து வசனம் பேசிவிட்டு, தினசரி தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான லாரிகளில் ஆற்று மணல்களும், மலைகளை தரைமட்டமாக்கி என்சாண்ட் எடுக்கப்பட்டு இயற்கை வளம் கொள்ளை போவது குறித்தும் அமைதி காத்து வருவதில் என்ன பலன் இருக்கிறது..?
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச் சூழலை சூறையாடிய நிலையில், அவர்களின் போராட்டத்திற்கு துணை நிற்க முடியாத ஒருவரால் அரசியலில் என்ன சாதிக்க முடியும்?
டாஸ்மாக் சாராய போதைக்கு அடிமையாக்கப்பட்டு எளிய மக்களின் குடும்பங்கள் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாகிய நிலையில் அது பற்றி பரிவோடு, பேசவோ, செயல்படவோ யோசிக்கவும் முடியாத ஒருவரால் இங்கு எப்படி அரசியல் செய்ய இயலும்?
தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு பணப்பட்டுவாடா கனஜோராக நடக்கும் போது, ”பணத்தை வாங்காதீர்கள்…” என களத்தில் இறங்கி சொல்லத் துணியாமல் உள் அரங்கில் பேசுவதில் என்ன பலன் கிடைக்கப் போகிறது…?
2009 தொடங்கி ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய பிறகு, ஒரு மாதத்திற்கு நான்கு நாளேனும் அதற்கு செலவழித்திருப்பீர்களா? வருடத்திற்கு ஒரு படம் தான் நடிக்கிறீர்கள் எனும் போது மக்களுக்கான சேவையில் ஈடுபட நிறைய நேரம் கிடைக்கிறதல்லவா? என்ன செய்கிறீர்கள்?
‘மெர்சல்’ படத்தில் மருத்துவ கொள்ளைகள் குறித்து தோளுரித்து பேசினால் போதுமா? சம்பாதித்த பணத்தில் நான்கு மருத்துவமனைகளைக் கட்டி மருத்துவ சேவை என்றால் என்ன? என்பதை நிருபித்து காட்டி இருக்கலாமே!
‘சர்க்கா’ர் படத்தில் இலவசங்கள் குறித்து கடுமையான விமர்சனங்கள் வைத்த நீங்கள் தமிழகத்தில் இலவசமாக தொலைகாட்சி பெட்டிகள், மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் போன்றவற்றை தேர்தல் வாக்குறுதியாக கட்சிகள் அறிவித்த போது, ”இலவசம் முக்கியமல்ல, நேர்மையான நிர்வாகம் தான் மகக்ள் எதிர்பார்ப்பது, உழைக்கத் தயார், வேலை தாருங்க மக்கள் தாங்களாகவே அனைத்தையும் வாங்கிக் கொள்வார்கள்” என சொல்லி இருக்கலாமே!
2002-20011 திமுக ஆட்சி காலத்தில் சன்பிக்சர்ஸ் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்த காலத்தில் உங்கள் காவலன் படம் பாதிக்கப்பட்டது. அதை எதிர்க்க துணிவின்றி அமைதி காத்து, 2011 தேர்தலில் ஜெயலலிதா கேட்காமலே அதிமுகவிற்கு ஆதரவு தந்தீர்கள்! ஏன் ஜெயலலிதா நேர்மையான ஆட்சி தரக் கூடியவர் என்பதாலா? அதிமுக வெற்றி பெற்ற பின் அந்த வெற்றியில் அணிலாய் உங்கள் பங்களிப்பும் இருந்தது என சொன்னதற்காக ஜெயலலிதாவால் அவமானப்படுத்தப்பட்டீர்களே! உங்கள் தன்மானம் எங்கே போனது?

தலைவா படத்தில் டைம் டூ லீட் என்ற வாசகத்தை பேஅனரில் வைத்தற்காக படத்தை திரையிட ஜெயலைதா அரசு தடுத்த போது கொட நாடு ஓடிச் சென்று கும்பீடு விழப் போனீரீர்கள். ஜெயலலிதா பார்க்கவே விரும்பாமல் திரும்பி வந்தீர்கள். இது பற்றி பொதுவெளியில் பேசவும் பயந்து, அம்மா அவர்கள் தலைவா படம் வெளியீட்டிற்கு உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து, அம்மாவின் கோபத்திற்கு காரணமான ‘டைம் டு லீட்’ என்ற வாசகத்தை அகற்றினீர்களே..!
அரசியலில் ஈடுபடுவதற்கான முதல் தகுதியே துணிச்சல் தானய்யா! அது உங்களிடம் இருக்கிறதா? என சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்!
சர்க்கார் படத்தில் ஜி.எஸ்.டி பற்றி பேசியதற்காக பாஜகவினரின் கோபத்திற்கு ஆளானீர்கள்! அதை சமாளிக்க மோடியை நேரில் சந்தித்தீர்களே! மோடி உங்களிடம் விதித்த நிபந்தனை என்ன? சொல்லத் தயாரா?
தற்போதும் கூட, ‘சில முன் நிபந்தனைகளுடன் தான் நீங்கள் அரசியலில் இறங்கிக் கொள்ள பாஜக இசைவு தெரிவித்துள்ளது’ எனச் சொல்லபடுகிறதே..? உண்மையை விளக்குவீர்களா..? உங்களை துவேஷமாகப் பார்த்த இந்துத்துவர்களும், தினமலர் போன்ற பத்திரிகைகளும் இன்று நேசமாகப் பார்ப்பதன் பின்னணி என்ன?
உங்களால் சொல்லவே முடியாது. ஏனென்றால், கருப்பு பணத்தில் புரளும் உங்களால் மத துவேஷத்திற்கு எதிராகவோ, ஊழலுக்கு எதிராகவோ ஒரு போதும் குரல் கொடுக்கவோ, செயல்படவோ முடியாது.
இதோ பக்கத்து மாநிலமான கர்நாடகத்தில் பிரகாஷ்ராஜ் எப்படி சுதந்திரமாக அரசியல் கருத்துகளை மனம் திறந்து பேசுகிறார்! பாஜகவை துணிச்சலாக எதிர்க்கிறார். அநீதியை எதிர்க்க முடிந்தவர்களால் மட்டுமே மக்கள் நம்பிக்கையை பெற முடியும்.
எம்.ஜி.ஆர் ஆக ஆசைப்படுகிறீர்கள்! ஆனால், தமிழகத்தில் யாராலும் எதிர்க்க முடியாதவராக கருணாநிதி கருதப்பட்ட காலத்தில் தான் அவரை துணிந்து எதிர்த்தார் எம்.ஜி.ஆர். அதனால், அவரது உலகம் சுற்றும் வாலிபன் படத்தை திரையிட முடியாத சூழலை கருணாநிதி உருவாக்கினார். எத்தனையோ பல தாக்குதல்களை சமாளித்து தான் எம்ஜி.ஆர் தலைவனாக வெற்றி பெற்றார். ஜெயலலிதாவும் ஏராளமான எதிர்ப்புகளை சந்தித்து தான் மேலெழுந்து வந்தார்!
Also read
வலிகளை தாங்க முடியாவிட்டால், அரசியலை நினைத்துக் கூட பார்க்க முடியாது! எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்படும் ஒரு அரசியலை நினைத்து பார்க்கவே கூடாது! ஏனெனில், அது துன்பத்தையே பரிசளிக்கும்
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
அரசியலில் நடிகர் விஜய்க்கு வழிகாட்டும் பதிவு
தமிழ் நாடு சினிமா நாடு .நிழலை நிசமாக பார்க்கும் நாடு
பிரமாதமான கட்டுரை.ஓட்டை பிரிக்க சீமான் போல் முன்னொட்டு கட்டப்படும்
இன்னொரு கூட்டம்.மாணவர்களை எதிர் கால வாக்காளர்கள் என்றாரே! அதற்கும் ஒரு குட்டு வைத்திருக்கலாம்.
சரியான கருத்துகள்.
அரிதாரம் பூசும் அனைவருக்கும் ஒரு நாள் நாமும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாதா என ஏக்கம் கனவு வருவது இயற்க்கை.
ஆனால் உழைப்பு தைரியம் எனது ஒர் சொட்டு கூட கொடுக்க துனியாத அரிதார பூச்சிகள் இன்றைய பெரும்பாலான நடிகர் நடிகைகள
திரையில் விரம் பேசுவது வேறு
நிஜத்தில் ஒரு வரி வீரம் பேசுவது வேறு.
விஜய் அரசியலில் இன்னொரு நகைசுவை அரசனாக ஆகுவார்.
விஜய்க்கு நடிப்பு திறமை கிடையாது. பட காட்சிகளில் அவர் அழுதால் சிரிக்கிற மாதிரி இருக்கும். சிரித்தால் அழுகிற மாதிரி இருக்கும். ஆளும் அழகு இல்லை. நடிப்பு திறமை என்பதே இல்லாமல் “ல்தகா சைஆ” முதலிய சில்லறை வசனங்களை பேசி ஸ்டைல் என்னும் பெயரில் கோமாளி சேட்டைகளை செய்து ஒப்பேத்தி மாஸ் ஹீரோவாக தமிழ் சினிமாவில் மட்டும் வலம் வர முடியும். மலையாளம் உள்ளிட்ட மற்ற மொழி சினிமாவில் டின் கட்டி விடுவார்கள். ஷகிலா மாதிரி ஆட்களோடு நடிக்க ஒரு வேளை வாய்ப்பு கிடைக்கலாம். உண்மையில் சந்திரசேகர் என்பவர் இல்லை எனில் விஜய் யாரென்று யாருக்கும் தெரிந்திருக்காது. அப்பாவின் நிழலில் வளர்ந்த செடி தான் விஜய். விஜய்யின் அப்பா தன்னிடம் இருக்கும் துணை இயக்குநர்களை எடுபிடிகளை விடவும் மோசமாக நடத்துவதற்கு பெயர் பெற்றவர் என கேள்விப்படுகிறோம். துணை இயக்குநர்களுக்கு அடியும் உதையும் போட்டு மகனை எப்படியோ தூக்கி விட்டு விட்டார். அந்த சந்திரசேகருக்கு பல காலமாக இந்த அரசியல் பேராசை இருக்கிறது. தமிழ் நாட்டில் இலவசத்துக்கு ஏங்கி அலையும் பிச்சைக்கார கூட்டம் பெரிதாக இருக்கிறது. அந்த கூட்டமும் சில் வண்டுகளும் அரிதாரம் பூசியவர்களை எளிதாக நம்ப கூடியவர்கள் என்பதால் வந்த பேராசை. தமிழ் நாட்டுக்கு இந்த வகையிலும் கெட்ட காலம் இருந்தால் விட்டா போகும். ஆனால் எம்ஜிஆர் வீட்டுக்கு பிறகு அதிகமாக அடுப்பு எரிந்த வீட்டுக்காரர் இப்போது இருக்கும் நிலையையும் கொஞ்சம் நினைக்க வேண்டும்.
good one
Do you have a spam issue on this website; I also am a blogger, and I was wanting to know your situation; many of us have created some nice methods and we are looking to swap solutions with other folks, be sure to shoot me an e-mail if interested.
I am continually looking online for articles that can benefit me. Thank you!
Hi my family member! I want to say that this article is amazing, great written and include almost all significant infos. I’d like to see extra posts like this .
I was recommended this blog by my cousin. I am not sure whether this post is written by him as no one else know such detailed about my difficulty. You are wonderful! Thanks!
купить справку
I seriously love your site.. Pleasant colors & theme. Did you make this website yourself? Please reply back as I’m hoping to create my very own website and would like to know where you got this from or what the theme is called. Thanks!
What i do not realize is actually how you’re not really a lot more smartly-favored than you may be right now. You are so intelligent. You know therefore significantly on the subject of this topic, produced me individually believe it from numerous various angles. Its like men and women aren’t fascinated unless it’s something to accomplish with Lady gaga! Your personal stuffs excellent. Always take care of it up!
This is very interesting, You are a very skilled blogger. I have joined your feed and look forward to seeking more of your fantastic post. Also, I have shared your site in my social networks!
These are in fact wonderful ideas in regarding blogging. You have touched some nice points here. Any way keep up wrinting.
I’m gone to inform my little brother, that he should also go to see this weblog on regular basis to get updated from newest information.
If some one wants expert view concerning blogging and site-building after that i propose him/her to go to see this blog, Keep up the pleasant job.
What’s Happening i’m new to this, I stumbled upon this I have found It positively helpful and it has helped me out loads. I am hoping to give a contribution & aid other users like its helped me. Good job.
Hi my loved one! I want to say that this article is awesome, great written and come with almost all important infos. I’d like to peer more posts like this .
Marvelous, what a weblog it is! This blog gives useful data to us, keep it up.
I was wondering if you ever considered changing the page layout of your blog? Its very well written; I love what youve got to say. But maybe you could a little more in the way of content so people could connect with it better. Youve got an awful lot of text for only having one or two images. Maybe you could space it out better?
I am in fact happy to read this website posts which includes plenty of useful information, thanks for providing such data.
Hi, just wanted to say, I enjoyed this article. It was inspiring. Keep on posting!
I’m not sure where you are getting your info, but good topic. I needs to spend some time learning more or understanding more. Thanks for great information I was looking for this information for my mission.
Hey I am so grateful I found your weblog, I really found you by mistake, while I was browsing on Aol for something else, Anyhow I am here now and would just like to say many thanks for a fantastic post and a all round thrilling blog (I also love the theme/design), I dont have time to read through it all at the minute but I have book-marked it and also added in your RSS feeds, so when I have time I will be back to read a great deal more, Please do keep up the excellent b.
Hello very nice blog!! Guy .. Beautiful .. Amazing .. I will bookmark your blog and take the feeds also? I am glad to find numerous useful information here in the submit, we’d like develop more strategies in this regard, thank you for sharing. . . . . .
Hey there would you mind letting me know which hosting company you’re utilizing? I’ve loaded your blog in 3 completely different web browsers and I must say this blog loads a lot quicker then most. Can you suggest a good internet hosting provider at a honest price? Cheers, I appreciate it!
I know this if off topic but I’m looking into starting my own blog and was wondering what all is required to get set up? I’m assuming having a blog like yours would cost a pretty penny? I’m not very internet savvy so I’m not 100% positive. Any tips or advice would be greatly appreciated. Appreciate it
great issues altogether, you just won a emblem new reader. What might you suggest in regards to your post that you simply made a few days ago? Any positive?
I’m not sure where you are getting your info, but good topic. I needs to spend some time learning more or understanding more. Thanks for great information I was looking for this information for my mission.