தேசமே தீப்பிடித்து எரிகிறது! அக்னிபாத் என்பது இந்திய இளைஞர்களை இன்று அக்னி பிழம்பாக மாற்றியுள்ளது! பாஜக ஆட்சி இராணுவத்திற்கு கன்னாபின்னா என்று அதிக நிதியை ஒதுக்கி, ”ஆயுதங்களுக்கு அதிக நிதியை செலவழிப்போம். ஆனால், அர்ப்பணிப்போடு ராணுவத்திற்கு வரும் வீர்களை அத்துக் கூலிகளாக நடத்துவோம்” என்கிறார்கள்! பீகாரில் தொடங்கி உ.பி.ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் , இமாச்சசல் பிரதேசம் ,தெலுங்கானா என அனைத்து வட இந்திய மாநிலங்களிலும் இளைஞர்கள் ரயில் மறியல் போராட்டங்களில் குதித்துள்ளனர். ஏராளமான ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது, வன்முறையும், போலீஸ் தடியடியும் தொடர்கிறது. காரணம், ...