ஜனவரி- 3 முதல் 15 லிருந்து 18 வயதிற்குட்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என்ற பிரதமர் மோடி அறிவித்துள்ளதை புகழ் பெற்ற ஆங்கில மருத்துவர்கள் பலர் ”இது அறிவியல் பூர்வற்றது, அவசர கதியிலானது, தேவையற்றது” என தெரிவித்துள்ளனர்! எதிர்ப்பு வலுக்கிறது! புகழ்பெற்ற எய்ம்ஸ் நிறுவனத்தின் மருத்துவர் சஞ்சய் கே ராய். இவர் கோவேக்சின் பரிசோதனை முயற்சிகளின் முதன்மை ஆய்வாளர். இவர் பப்ளிக் ஹெல்த் அசோஷேசியன் தலைவராகவும் உள்ளார். சிறுவர்களுக்கு கொரானா தடுப்பூசி குறித்து இவர் கூறும் போது, ”குழந்தைகளுக்கு கொரானா மிகவும் அரிதாகவே ...