சபாஷ்! அதிகார மமதையில் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிய ஆளுநரை சரமாரியாக கேள்விகள் கேட்டனர் நீதிபதிகள்! அவரது உள் நோக்கங்களை அம்பலப்படுத்தினர் ! சிறந்த முறையில் அறிவுறுத்தல்கள் தந்தனர்… எனத் தற்காலிக சந்தோஷத்தை கடந்து, இந்த வழக்கினால் வேறு முன்னேற்றம் உண்டா? செய்ய வேண்டியது என்ன? ஆளுநர்கள் அரசியல் சட்டத்தை மீறி, மக்களாட்சியின் மாண்புகளை மீறி செயல்படுவதால், மாநில அரசின் செயல்பாடுகள் முடங்குவதால், விழிபிதுங்கி மாநில அரசுகள் மீண்டும், மீண்டும் உச்சநீதிமன்றத்தில் முறையிடுவதும், மீண்டும், மீண்டும் நீதிபதிகள் ஆளுனருக்கு கண்டனம் மற்றும் அறிவுறுத்தல்கள் தருவதுமாக.. போய்க் ...

உண்ணாவிரதம், தர்ணா, ஒரு மணி நேர ஆர்ப்பாட்டம், பேரணி, கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிக்கும் அமைதியான எதிர்ப்பு, கண்டனக் கூட்டம்.. என எல்லாவற்றுக்கும் தடை என்றால்..எப்படி? ஜனநாயகத்தில் போராடுவதற்கான உரிமை தொடர்ந்து மறுக்கப்படுமானால், அது உச்சகட்ட கொந்தளிப்பை உருவாக்காதா..? “நீ சொல்வதோடு நான் உடன்படாமல் போகலாம். ஆனால் அதைச் சொல்லும் உரிமை உனக்கு உண்டு” என்பது பிரெஞ்சு சிந்தனையாளரான வால்டேரின் புகழ்பெற்ற வசனமாகும். நமது அரசியல் சாசனம்,  பேச்சுரிமையையும், போராட்ட உரிமையையும் நமக்கு அளித்துள்ளது. அதனை உறுதி செய்ய வேண்டிய தமிழக அரசின் ...