பரந்தூர் விமான நிலையத்திற்கு 13 கிராமங்களில் மொத்தமாக 4,747 ஏக்கர் நிலம் கையகப்படுத்த உள்ளது. இதில் அரசு நிலங்களை தவிர்த்து, சுமார் 3,247 ஏக்கர் நிலங்கள் மக்களின் விவசாயப் பயன்பாட்டில் இருப்பவை! கண்ணீர்விட்டுக் கதறும் மக்களை கால்தூசுக்கு சமமாக ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள்! பெரும்பான்மை நிலங்கள் நெல் நன்கு விளையும் நன்செய் நிலங்களாகும்! இவை எளிய மக்களின்  வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டவையாகும்! இங்கு பெரும்பாலான மக்கள் ஏரி பாசனத்தில் விவசாயம் செய்பவர்களாகும்! இவை தவிர ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகளையும் இந்த திட்டம் விழுங்கவுள்ளது. வளத்தூர், பரந்தூர், நெல்வாய், ...