கடவுள் தான் டிரேட்மார்க், பக்தி தான் மூலதனம், கோவில்கள் தான் அள்ளக் குறையாத சுரங்கம் என்று செயல்படுவதற்காகவே அரசியல் அதிகாரத்திற்கு ஏங்குகிறது இந்தக் கூட்டம். அத்துமீறி அநீதிகளை செய்பவனே அங்கு அடுத்த கதாநாயகன்! களவாணி கார்த்திக்கை களத்தில் இறக்கியதே ஒரு திட்டமிட்ட சதி தான்! இது ஒரு பகல் கொள்ளை! கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்! ஊருக்கோ கோயிலுக்கோ எந்த சம்பந்தமும் இல்லாமல் எங்கோ இருந்து வந்த ஒருத்தன் வசூல் வேட்டை நடத்தி பணத்தை அள்ளிக்கிட்டுப் போவான். அதை பார்த்துட்டு சும்மா இருக்கணும் மக்களும்,அரசாங்கமும்! மோசடியாளனை கைது ...

35 ஆயிரம் கோடி சொத்துக்குரிய பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகம் சர்ச்சைக்கு பேர் போனது! பேராசிரியர் பணிக்கு லட்சக்கணக்கில் லஞ்சம், வாடகை வசூலில் மோசடி, அரசியல்வாதிகளின் தலையீடுகள்..என கதி கலங்கி கிடக்கும் நிர்வாகத்திற்கு தற்போது தேர்தல் நடத்துவதற்கு அரசியல் அழுத்தம் தரப்படுகிறது! தேர்தல் நடத்த என்ன தடை? தமிழ் நாட்டிலேயே மிகப் பெரிய அறக்கட்டளையாக 35,000 கோடி பெறுமான சொத்துக்களோடு திகழ்வது பச்சையப்பன் அறக்கட்டளை! மிகப் பெரிய செல்வந்தரும்,வள்ளலுமான பச்சையப்பன் தன் கடும் உழைப்பால் சேர்த்த செல்வங்களை பொது நலன் சார்ந்து கல்விக்கு பயன்படுத்த உயில் ...