சான்றோர்களுக்கெல்லாம் சான்றோராக திகழ்ந்தவர்! அன்புக்கும், இனிய பண்புக்கும் இலக்கணமானவர் ஆனந்த கிருஷ்ணன்! அவர் வெறும் கல்வியாளர் மட்டுமல்ல, செயல்பாட்டாளர்! துணிச்சலானவர், நேர்மையானவர்! சுயநலமற்றவர், நல்லவற்றை ஆதரித்து, அரவணைப்பதிலும், அல்லாதவற்றை எதிர்த்து சமர்புரிவதிலும் அவர் தயக்கம் காட்டியதே இல்லை. மிக உயர் பதவிகளை வகித்த போதிலும், ஒரு கல்வி மற்றும் சமூக போராளியாகவும் அவர் எப்படி செயல்பட்டார் என்பது தான் முக்கியம்! இயல்பாகவே அவரிடம் ஒரு தலைமைப் பண்பு இருந்தது. கல்வியாளர் டாக்டர். ஆனந்த கிருஷ்ணன் அவர்களின் பிரிவு உள்ளபடியே தமிழக சான்றோர்களின் இதயங்களை வாட்டி ...