எத்தனையோ முக்கிய பணிகள் காவலர்களுக்கு இருக்கிறது. ஆனால்,தற்போது அவர்களின் ஒரே பணி யார் முகக் கவசம் அணியவில்லை, யார் எச்சில் துப்புகிறார்கள்,..பிடி, விடாதே., போடு அபராதம், எடு பணத்தை என்பதாகிவிட்டது. திருட்டு,கொள்ளை,மோசடி எந்த புகாரும் முக்கியமில்லாமல் போய்விட்டது! மறு பக்கம் வட இந்தியாவில் பல லட்சம் பேர் பங்கேற்கும் கும்பமேளா நடக்கிறது. விவசாயிகள் போராட்டம் தில்லியில் 140 நாட்களைக் கடந்து தொடர்கிறது…! இது ஆழ்ந்த ஆய்வுக்கு உரியது! ஓராண்டு கால கொரானா அனுபவத்தில் நாம் என்ன படிப்பினை பெற்றுள்ளோம்..?தெளிவு பெற்றோம்.தைரியம் பெற்றோம். அதை நடைமுறைபடுத ...