என்ன பெரிசா நடந்துவிட்டது..? ஜவகர்லால் நேரு புகைப்படம் இந்திய சுதந்திரப் போராட்ட தலைவர்களின் முதல் வரிசையில் இடம் பெறவில்லை..! அவ்வளவு தானே…? இதுக்கே இப்படி குதித்தால் எப்படி.? இன்னும் மகாத்மா காந்தியை விட்டு வைச்சிருக்கோம்..அதுக்கு நன்றி சொல்ல வேண்டாமா..? வீரசாவர்க்கர் போன்ற மகான்கள் வரிசையில் காந்திக்கும் இடம் தரப்பட்ட பெருந்தன்மையை போற்ற வேண்டாமா? பாட புத்தகங்களில் ரவீந்திரநாத் தாகூரையே காலி பண்ணியாச்சு..இன்னும் என்னென்னவோ இருக்கே..! இந்த ரீதியில் தான் பாஜக அரசு பயணப்பட்டுக் கொண்டுள்ளது..! இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சில் என்பது ஒன்றிய கல்வி ...