பள்ளிகள் திறக்கப்பட்டாலும்  அங்கன்வாடிகள் , மழலையர் வகுப்புகள், இன்னும் திறக்கப் படவில்லை! வரும் மாதங்களில் திறக்கலாம். மழலையர் பள்ளிகள் உருவாகத்தில் இதுவரை அரசுக்கு ஏனோ போதிய ஆர்வம்  இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், மழலையர் பள்ளிகளை முறையாக கட்டமைக்காவிட்டால், இனி அரசு பள்ளிகளே கிடையாது…என கள நிலவரங்கள் சொல்கின்றன! தற்போதைய அரசுப் பள்ளிகளின்  மழலையர் வகுப்புகளில் ஏராளமான சிக்கல்கள் உள்ளன. குழந்தைகளையும்,பெற்றோர்களையும் ஈர்க்கும் வகையில் அவற்றை மாநிலம் முழுக்க முறைப்படுத்தப் பட வேண்டியது மிக அவசியம் மட்டுமல்ல, அவசரமானதும் கூட! தனியார் மயக் கல்வி  தமிழகப் பள்ளிக் கல்வி ...