ராட்சத மணல் கொள்ளைகள் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து நடைபெற்றுக் கொண்டுள்ளன! நீர்வளத் துறை அமைச்சர் பொறுப்புக்கு முற்றிலும் பொருந்தாதவராக நீர் வற்றும் வாய்ப்புகளை நாளும், பொழுதும் ஆராய்ந்து, மணல் கொள்ளையில் மலைக்க வைக்கும் சாதனை நிகழ்த்துகிறார் துரைமுருகன்! திமுக ஆட்சிக்கு வந்ததும் கடந்த ஆண்டு அக்டோபரில் புதிதாக 15 மணல்குவாரிகளை ஏற்படுத்தினார் துரைமுருகன். தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 41 மணல் குவாரிகள் செயல்படுகின்றன! 21 மணல் குவாரிகள் லாரிகள் மூலமாகவும், 30 மணல் குவாரிகள் மாட்டு வண்டி மூலமாகவும் மணல் அள்ளப்பட்டு வருகின்றன! ...