சமரசமற்ற ஒரு நேர்மையான அதிகாரியால் எழுதப்பட்ட சமகால வரலாறு! நேர்மையாக இயங்குவது எவ்வளவு கசப்பான அனுபவங்களைத் தரும், எதிரிகளை உருவாக்கும், நெருப்பாற்றில் நீந்த வைக்கும்… என்பதை தன் அனுபவத்தின் வாயிலாக விளக்குகிறார் நல்லம்ம நாயுடு. ஆனால், இவரது நேர்மையின் உறுதிப்பாடு இல்லாமல் ஜெயலலிதா சிறைச்சாலைக்கு சென்று இருக்க வாய்ப்பில்லை என அறியும் போது வியப்பாக உள்ளது..! காமராஜர் தொடங்கி ஜெயலலிதா வரையிலான ஆளுமைகளை சரியாக அடையாளப்படுத்துகிறார்! நேர்மை என்பது மனிதர்களுக்கு இயல்பாக இருக்க வேண்டியது. ஆனால் அப்படி இருக்கும் சிலரையும் அதில் இருந்து தடம் ...













