இப்படி உங்களுக்கு நேர்ந்தால் …, சற்று கற்பனை செய்து பாருங்கள். காலை கண்விழித்து பார்க்கும் போது உங்களின் மொத்த குடும்பமும் குண்டுவீச்சில் மாண்டு போனால் எப்படி நீங்கள் உணர்வீர்கள் …. இந்த உணர்வுதான் உலகமே நிலைகுலைந்த பயங்கர உணர்வுதான்  காசாவில் வாழும் அனைவரும் அனுபவிக்க தொடங்கினர் மே 10ந்தேதி காலை முதல்! காரணம், இஸ்ரேல் நாட்டின் கண்மூடித்தனமாக ஏவுகணை தாக்குதல்தான். பதிலுக்கு ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட்களை இஸ்ரேல் மீது ஏவினர். இவை பெரும்பாலும் இலக்கை சென்றடைவதில்லை. காரணம். இவற்றின் சக்தி  அவ்வளவுதான்! ஆனாலும், அவை அம்மக்களின் மன ...