முதல் உலகப் போரில் போரிட்ட இந்திய வீரர்களின் வலி மிகுந்த அனுபவங்களின் ஊடாக, போலி தேசபக்தியும், போர்வெறியும் விளைவிக்கும் பேரழிவுகளை துல்லியமாக காட்சிப்படுத்துகிறது     ச. பாலமுருகன் எழுதிய இந்த நாவல்! டைகரிஸ் நதிக்கரையில் போரிட்டு, அந்த நதி வெள்ளத்தில் தங்கள் ரத்தத்தை ஈந்து உயிரிழந்த இந்திய வீரர்களின் சொல்லப்படாத கதை! மனித உரிமை செயற்பாட்டாளரான ச.பாலமுருகன்  எழுதியுள்ள  நாவல் ‘டைகரிஸ்’. முதலாம் உலகப் போரில் இந்தியாவிலிருந்து இலட்சக்கணக்கான வீரர்கள், அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த வெள்ளையர்களுக்கு ஆதரவாக போரில் கலந்து கொண்டனர். துருக்கி ...